ஒருமுக ருத்ராட்சம்

ஒரு முக ருத்ராட்சம்

அடர்ந்த காடுகளில் கிடைக்கும் ஒரு வகை கடினமான மெழுகில் ஒரு முக ருத்ராட்சம் (கிராப்ட்) சிறிய கத்தி கொண்டு உருவாக்கம் செய்யப்படுகின்றது.

இதுபோல ஒரு ஒருமுக ருத்ராட்சம் கிராப்ட் செய்ய சுமார் 300/- வரை தருகின்றார்கள்.

மெழுகாக இருப்பதால் கனத்தின் காரணமாக நீரில் மூழ்கி விடும்.

நீங்கள் ஒரு முக ருத்ராட்சம் வாங்கினால் அதனை லேசாக விளக்கின் தீபத்தில் காண்பியுங்கள் , மெழுகாக இருந்தால் உருகி விடும்.

பச்சையான ருத்ராட்ச காய்களை வாங்கி வந்தும் இதுபோல வடிவங்கள் அமைத்து உருவாக்கம் செய்கின்றார்கள் .

ஒரு முக ருத்ராட்சம் இறைவனுக்கு நிகரானதாக கருதப்படுகின்றது. ஒரு முக ருத்ராட்சத்துக்கு ஜின் போன்ற பூத கணங்களை விரட்டும் சக்தி அபரிதமாக இருக்கிறது.

ஒரு முக ருத்ராட்சத்தை ஓடும் நீரில் போட்டால் நீரை எதிர்த்து எதிர்த்திசையில் செல்லும் என்பது ஒரு பரிசோதனை;ஒரு முக ருத்ராட்சத்தை பூமிக்கடியில் வெகு ஆழத்தில் புதைத்தாலும் அது மேலே வந்துவிடும்.

பெரிய பால் பீப்பாயில் அதைப்போட்டு பஞ்சாட்சர மந்திரம் சொன்னால் பால் பூராவும் உறிஞ்சப்பட்டுவிடும்.

பஞ்சபூதங்களை வெல்லும் சக்தி ஒரு முக ருத்ராட்சத்துக்கு உண்டு.நவக்கிரகங்களையும் கட்டுப்படுத்தும் சக்தி அதற்கு உண்டு.

ஒரு செம்பு தாம்பாளத்தில் ஒரு முக ருத்ராட்சம் வைத்து அதன்மேல் சாதாரண ருத்ராட்சங்களை போட்டால் பதினைந்து நிமிடத்தில் ஒரு முக ருத்ராட்சம் சாதாரண ருத்ராட்சங்களை விலக்கிக்கொண்டு மேலே வந்துவிடும்.

இவ்வாறான மகா பெரிய சக்திவாய்ந்த , மகத்தான , இறைவனுக்கு நிகரான ஒரு முக ருத்ராட்சதை வைத்திருப்பவர்கள் , ஏழ்மையில் இருப்பார்களா ? அதனை விற்று பிழைக்கும் நிலை வருமா ?

பல கோடி ருபாய் தந்தாலும் இறைவனை இழக்க சம்மதிப்பார்களா ? சிந்தியுங்கள். பின்னர் விலையை பேசலாம். ஓம் நமசிவய.

ஏமாற வேண்டாம் , உஷார்.

ஓம் நமசிவய.

ஆசையின் திருமுகம்

அன்பு நண்பர்களே , வணக்கம்.

ஆசையின் திருமுகம்

ஆசையின் திருமுகம் என்பது எல்லோருக்கும் அறிமுகமானது , ஆசையின் விளைவினால் உருவாகும் கோரமுகம் என்பது எல்லோரும் உணர்ந்தது.

திருமுகம் என்பதற்கும் கோரமுகம் என்பதற்கும் உள்ள வித்தியாசம் அனுபவப்பட்டவர்களுக்கு மிக தெளிவாக விளங்கும்.

ஆசையின் ஆரம்பம் எல்லோருக்கும் சுகமாக இருந்தாலும் , ஆசையின் முடிவு பலருக்கு சுகமாக இருப்பதில்லை.

காரணம், ஆசையின் பின்னே பயணம் போகும்போது, மனிதர்கள் அதனால் ஏற்படும் பின் விளைவுகளை பற்றி சிந்திப்பதில்லை . பின் விளைவுகளை சந்திக்கும் போது “அடாடா இப்படியாகிவிட்டதே இனிமேல் அம்மாதிரி நடக்கக்கூடாது என்று தீர்மானிப்பதும் இல்லை – மாறாக – “விடு விடு அடுத்த முறை பார்த்துக் கொள்ளலாம் என்று எண்ணி மீண்டும் ஒரு கோர விளைவுக்கு தங்களை தயார் செய்து கொள்கின்றார்கள்.

ஆசையின் செயல் எவ்வாறு நிகழ்கின்றது ?

ஏன் நம்மை அது பாதிப்பது நமக்கே தெரிவதில்லை ?

 

ஆசையின் செயல் எவ்வாறு நிகழ்கின்றது ?

பார்ப்போமா !….

ஆசை என்பது எப்போதும் நம்மிடம் உள்ள எதன் மீதும் நமக்கு துளியும் வருவதில்லை (அதுதான் நம்மிடம் இருக்கின்றதே) எது நம்மிடம் இல்லையோ அதன் மீதே நாம் பெரும்பாலும் ஆசையுறுகிறோம்.

நமது ஆளுகைக்கு உட்பட்ட எதனையும் நாம் ஆசைப்படுவதில்லை . அதற்காக சிரமப்படுவதில்லை ஆனால் நம்மிடம் இல்லாத, மற்றவர்களிடம் உள்ள “எதையும் நாம் ஆசைப்பட கொஞ்சமும் தயங்குவதில்லை

இந்த பழக்கம் நமக்கு இப்போது வந்ததல்ல , மனிதர்கள் ஒவ்வொருவரும் அவர்கள் குழந்தையாக இருந்த போதே அவர்களுள் உருவானதாகும்.

குழந்தைகள் எப்போதும் தன்னிடமுள்ள விளையாட்டு பொருளைக்காட்டிலும் தனது சகோதரன் அல்லது பக்கத்து வீட்டு குழந்தைகளிடம் உள்ள விளையாட்டு பொருளையே கேட்டு அடம்பிடித்து அழும்.

அது மலிவுவிலை பொருளாக இருந்தாலும் அதனையே விடாமல் கேட்கும். அப்பாவோ , அம்மாவோ எவ்வளவு சமாதானம் சொன்னாலும் சமாதானம் ஆகாது. அதனை வாங்கித் தந்தோ அல்லது குழந்தையை அடித்தோ அதன் ஆசையை மறக்கச் அல்லது மாறச் செய்வார்கள்.

இந்த சிறுவயது ஆசை  எல்லா வயதிலும் விடாமல் துரத்தி இளமைக் காலம் , முதுமைக்காலம் என தொடர்ந்து பேராசையாக வளர்ச்சி பெற்று உருமாறி வருகின்றது.

மேலும் எளிதில் கிடைக்கக்கூடிய எதையும் மனிதர்கள் ஆசைப் படுவதில்லை, அது லௌகீகமாக இருந்தாலும் , ஆன்மீக , ஞான மார்க்கமாக இருந்தாலும் மனிதர்கள் ஆசைப்படுவது நடக்கவோ, கிடைக்கவோ, பெறமுடியாததாகவே இருப்பதைத்தான் ஆசைப்படுகிறார்கள்.

மனிதர்கள் ஆசைப்படுவதை தவறென்று சொல்லமுடியாது. ஆனால் கிடைக்க முடியாமல் போனால் ஏற்படும் மனவேதனையும் , மன உளைச்சலும் மனிதர்களின் எல்லாவித முன்னேற்றத்தினையும் தடுக்கும் பின்னாளில் மிகவும் பாதிக்கும்.

 

அடுத்து . .

ஏன் ஆசை நம்மை பாதிப்பது நமக்கே தெரிவதில்லை ?

ஒரு உதாரணம் பார்ப்போம் .

உலகம் உருண்டையாக இருப்பதாக விஞ்ஞானம் சொல்வதை எல்லோரும் ஒப்புக்கொண்டிருக்கின்றோம் உண்மையும் அதுதான்.

ஆனால் நாம் நடந்தே உலகை சுற்றி வந்தாலும் எங்குமே வழுக்கிக்கொண்டு கீழே விழ முடியாது அல்லவா ? காரணம் என்ன ? நாம் அந்த உருண்டையின் மேலேயே நிற்கிறோம் – உலகை தாண்டி நின்றால்தான் உலகம் உருண்டையாக தெரியும் – அதனால்தான் நமக்கு உலகம் உருண்டை வடிவமாக எங்குமே தெரியாமல் ஒரு நீண்ட சதுரமாக தெரிகிறது.

அதுபோலவே முழுக்க முழுக்க ஆசையின் வடிவமாக நாமே மாறி விட்டதால் , அதீதமான ஆசையின்பால் நாம் ஈர்க்கப்படுவதை உணரவே முடியவில்லை. மேலும் நமக்கு ஆசையை முறைபடுத்துவதும் இயலாமல் போகின்றது.

நாம் ஆசையோடு இருப்பதையே நாம் உணராமல் இருப்பது அப்படித்தான்.

இதனைப் படிக்க நேரும் நண்பர்கள் தங்களது ஆசையை தங்களது கட்டுக்குள் வைப்பார்கள் எனும் அடியேனது எண்ணமும் ஒருவித ஆசைதானே . 

ஆசை என்பது ஒவ்வொரு உயிருள்ள ஜீவனுக்கும் கண்டிப்பாக வேண்டும்.

ஆசையில்லையேல் எதையும் சாதிக்கமுடியாது , ஆனால் ஆசையை வகைப்படுத்த தெரிந்தவர்கள் ஆசைப்படுவதே சிறந்ததாகும்.

மனம் எண்ணும் எதன்மீதும் ஆசையை வைத்தால் ஆசை நிறைவேறாததுடன் வாழ்வும் வளமற்று போகும்.

மனதில் உண்டாகும் ஆசையை வரையறைக்குள் வைப்பது நம் வாழ்வை வளப்படுத்த நாம் எடுக்கும் முயற்சி.

மனதில் தோன்றும் வரைமுறையற்ற ஆசையின் பின்னே போவது நம் வாழ்வை சீரழிக்க நாமே எடுக்கும் முயற்சி.

மண்ணாசை , பொன்னாசை , பெண்ணாசை மட்டுமல்ல , இறைவா, உன் பதம் தந்தருள்வாய் எனும் ஞானியின் வேண்டுதலும் ஆசையே அல்லவா?

ஆகவே , ஆசை எதுவானாலும் அதனை நெறியுடனும் , முறையுடனும் , யாரையும் , எந்த வகையிலும் , உடலோ, மனமோ பாதிக்காத வகையில் மனிதர்கள் ஆசைகொண்டு நடப்பார்களேயானால் , அவர்களது ஆசை நிறைவேறுவது மட்டுமல்ல , ஆசையின் விளைவு திருமுகமாக நிலைத்து நிற்கும் என்பது உண்மை.

முறையற்ற ஆசையின் விளைவுகள் கோரமுகம் காட்டுவது மட்டுமல்ல , மனித வாழ்வின் இறுதியை நாடச்செய்யும் பேராபத்தை விளைவித்து விடும் என்பதும் மாறாத உண்மையே.

ஆசைப்படுங்கள் , அது உங்கள் கட்டுக்குள் இருக்கட்டும். ஆசையின் கட்டுக்குள் நீங்கள் போகாதீர்கள் .

ஆசைப்படுங்கள் , அது உங்கள் அவசியமானதாக இருக்கட்டும். எதற்கும் இருக்கட்டுமே என்று ஆசைப்படாதீர்கள்.

ஆசைப்படுங்கள் , அந்த ஆசை குறைந்த ஆயுள் உள்ளதாக இருக்கட்டும் , ஆசை உங்கள் ஆயுளை குறைப்பதாக இருக்கவேண்டாம்.

ஆசைப்படுங்கள் , அது பொது நலமாக இருக்கட்டும் , ஆசை உங்கள் சுயநலமாக இருந்தால் கண்டிப்பாக அது கோரமுகத்தினை காட்டிவிடும்.

வளமோடு வாழுங்கள் , வாழும் நாளெல்லாம் .

அன்புடன் கருணாகரன்.

மந்த்ரமும் மாந்த்ரீகமும் தொடர்ச்சி . . . 6

அன்பு நண்பர்களே, வணக்கம்.

மந்த்ரமும் மாந்த்ரீகமும் தொடர்ச்சி . . . 6

 நாம் அறிந்து கொள்ள முற்படும் யோகம் மூலிகை மந்த்ரம் பகுதியில் மூலிகைகளை பயன்படுத்தும் விதம் பற்றிய பாகத்தை காணப் போகின்றோம்.

 சென்ற பதிவின் இறுதியில் நாம் கண்டது . . . .

ஒவ்வொரு மூலிகைக்கும் அதனை நாம் எடுத்துக்கொள்வதற்கு குறிப்பிட்ட நாளும் நட்சத்திரமும்மந்திரமும் உண்டு .

 மூலிகை சாபம் நீக்கவும் எடுக்கவும் என்ன செய்ய வேண்டும் எப்போது செய்ய வேண்டும் எப்படி செய்ய வேண்டும் என்பதனை விரிவாக பார்ப்போம். “ . . .

ஸ்ரீ ஸ்ரீ மகா குருவான கருவூரார் மூலிகைகளையும் `அதற்குரிய மந்த்ரங்களையும் தெளிவாக குறிப்பிடுகின்றார்.

 அவையாவன :

 வசிய மூலிகையில் ஒன்றான சீதாதேவி செங்கழுநீர் எனும் மூலிகையை பறிக்கும் முன் “ஓம் ஸ்ரீம் லட்சுமி தேவி “ என்று செடியின் முன் நின்று மந்த்ரம் ஜபித்து , அந்தச் செடியின் ஆணிவேரை அறுத்து விடாமல் எடுத்து பயன்படுத்த வேண்டும் .

 வசிய மூலிகையில் ஒன்றான பொன்னூமத்தை எனும் மூலிகையை பறிக்கும் முன் “கிறீணி வருணியாரே மதர்நாமி சீவி வசியம் பவ் வே  “ என்று செடியின் முன் நின்று மந்த்ரம் ஜபித்து , அந்தச் செடியின் ஆணிவேரை அறுத்து விடாமல் எடுத்து பயன்படுத்த வேண்டும் .

 வசிய மூலிகையில் ஒன்றான கரும் செம்பை எனும் மூலிகையை பறிக்கும் முன் அதற்கு தாமரை அல்லது கற்றாழை நூலில் காப்புக்கட்டி பூஜைகள் செய்து “ஓம் ஓம் சியாமள ரூபி சாம்பவி கிறீங்கி விலிங் கிறிஞ்சாதகி “ என்ற மந்திரம் உருவேற்றி மூன்றாம் நாள் அந்தச் செடியின் ஆணிவேரை அறுத்து விடாமல் எடுத்து பயன்படுத்த வேண்டும் .

 வசிய மூலிகையில் ஒன்றான வெண் குன்றிமணிக் கொடி எனும் மூலிகையை பறிக்கும் முன் அமாவாசையன்று காப்புக்கட்டி பூஜை செய்து “வம்மம் வசவிச நிறை மிருக வசீகரி ஓம் “ என்று செடியின் முன் நின்று மந்த்ரம் ஜபித்து , அந்தச் செடியின் ஆணிவேரை அறுத்து விடாமல் எடுத்து பயன்படுத்த வேண்டும் .

 வசிய மூலிகையில் ஒன்றான மஞ்சள் கரிசலாங்கண்ணி எனும் மூலிகையை பறிக்கும் முன் ஒரு வெள்ளிக்கிழமையன்று காப்புக்கட்டி மறு வெள்ளிகிழமை     “ ஓம் கிலியுஞ் சவ்வு மஹி “ என்று செடியின் முன் நின்று மந்த்ரம் ஜபித்து , அந்தச் செடியின் ஆணிவேரை அறுத்து விடாமல் எடுத்து பயன்படுத்த வேண்டும் .

 ******

 மோகன மூலிகையில் ஒன்றான வெண் ஊமத்தை எனும் மூலிகையின் இலையை  பறிக்கும் முன் “ மா இதான் மத்தம் தொன்மத்தி ஓம் ஆம் இலீஞ் சத்திசன மோகினி “ என்று செடியின் முன் நின்று மந்த்ரம் ஜபித்து , அந்தச் செடியின் ஆணிவேரை அறுத்து விடாமல் எடுத்து பயன்படுத்த வேண்டும் .

 மோகன மூலிகையில் ஒன்றான மருளுமத்தை எனும் மூலிகையை  பறிக்கும் முன் “ ஓம் தேவ மோகம் வருக வருக “ என்று செடியின் முன் நின்று மந்த்ரம் ஜபித்து , அந்தச் செடியின் ஆணிவேரை அறுத்து விடாமல் எடுத்து பயன்படுத்த வேண்டும் .

 மோகன மூலிகையில் ஒன்றான ஆலம் விழுது எனும் மூலிகையை  பறிக்கும் முன் “ ஓம் தேவ மோகம் வருக வருக “ என்று செடியின் முன் நின்று மந்த்ரம் ஜபித்து , அந்தச் செடியின் ஆணிவேரை அறுத்து விடாமல் எடுத்து பயன்படுத்த வேண்டும் .

 ******

 உச்சாடன மூலிகையில் ஒன்றான நரி மிரட்டி எனும் மூலிகையை  பறிக்கும் முன் செடிக்கு வியாழனன்று காப்புக்கட்டி “ சடாய் சடாய் தும்ம சடாய் சடாய் “ என்று செடியின் முன் நின்று மந்த்ரம் ஜபித்து , அந்தச் செடியின் ஆணிவேரை அறுத்து விடாமல் எடுத்து பயன்படுத்த வேண்டும் .

 உச்சாடன மூலிகையில் ஒன்றான மான் செவி கள்ளி எனும் மூலிகையை  பறிக்கும் முன் செடிக்கு மன மகிழ்வுடன் வாசனை மலர்கள் தூவி தூபமிட்டு , தீபம் காட்டி  “ அருணகிரி ஆங்கார சத்தி சத்தி தாய் உச்சாடி “ என்று செடியின் முன் நின்று மந்த்ரம் ஜபித்து , அந்தச் செடியின் ஆணிவேரை அறுத்து விடாமல் எடுத்து பயன்படுத்த வேண்டும் .

 உச்சாடன மூலிகையில் ஒன்றான ஆரண முரி எனும் மூலிகையை  பறிக்கும் முன் செடியின் வேருக்கு காப்புகட்டி ,  “ ஓம் கோர கோர ரூபி மாயி சடாய் சடாய் “ என்று செடியின் முன் நின்று மந்த்ரம் ஜபித்து , அந்தச் செடியின் ஆணிவேரை அறுத்து விடாமல் எடுத்து பயன்படுத்த வேண்டும் .

 *******

ஸ்தம்பனம் மூலிகையில் ஒன்றான கட்டுக் கொடி எனும் மூலிகையை  பறிக்கும் முன் செடியின் வேருக்கு காப்புகட்டி ,  “ சீலிகிளால் பேத்துலால் பேத்து சிவசிவா“ என்று செடியின் முன் நின்று மந்த்ரம் ஜபித்து , அந்தச் செடியின் ஆணிவேரை அறுத்து விடாமல் எடுத்து பயன்படுத்த வேண்டும் .(ஜலஸ்தம்பனம்)

 ஸ்தம்பனம் மூலிகையில் ஒன்றான பால்பிரண்டி (பாற் குரண்டி)  எனும் மூலிகையை  பறிக்கும் முன் ,  “ நீலகண்டி விசைய விசைய உயர்திற அத்திற் அகலந் தோபா “ என்று செடியின் முன் நின்று மந்த்ரம் ஜபித்து , அந்தச் செடியின் ஆணிவேரை அறுத்து விடாமல் எடுத்து பயன்படுத்த வேண்டும் .(சுக்லஸ்தம்பனம்) 

 ஸ்தம்பனம் மூலிகையில் ஒன்றான நத்தை சூரி எனும் மூலிகையை  பறிக்கும் முன் செடியின் வேருக்கு காப்புகட்டி ,  “ ஓம் வச்சிர ரூபி சூரி சூரிம, காவீரி சுவாகா “ என்று செடியின் முன் நின்று மந்த்ரம் ஜபித்து , அந்தச் செடியின் ஆணிவேரை அறுத்து விடாமல் எடுத்து பயன்படுத்த வேண்டும் .(ஜெயஸ்தம்பனம்) 

 *******

ஆகர்ஷனம் மூலிகையில் ஒன்றான சிறு முன்னை எனும் மூலிகையை  பறிக்கும் முன் செடியின் வேருக்கு காப்புகட்டி ,  “ சர்வ ஆகமுஷ்ணி சுவாகா “ என்று செடியின் முன் நின்று மந்த்ரம் ஜபித்து , அந்தச் செடியின் ஆணிவேரை அறுத்து விடாமல் எடுத்து பயன்படுத்த வேண்டும் .

 ஆகர்ஷனம் மூலிகையில் ஒன்றான சிறியா நங்கை எனும் மூலிகையை  பறிக்கும் முன் செடிக்கு கரி நாளில் காப்புகட்டி ,  “ சர்வ பிசாகர்ஷனி சர்வ மோகினி சூழ் கிருஷ்ணி வா வா  “ என்று செடியின் முன் நின்று மந்த்ரம் ஜபித்து , அந்தச் செடியின் ஆணிவேரை அறுத்து விடாமல் எடுத்து பயன்படுத்த வேண்டும்.

 ஆகர்ஷனம் மூலிகையில் ஒன்றான அழுகண்ணி எனும் மூலிகையை  பறிக்கும் முன் செடிக்கு திங்கள் கிழமை காப்புகட்டி ,  “ சர்வ சித்த மோகினி , சர்வா கிருஷ்ணி சாம்பஷ சுவாகா “ என்று செடியின் முன் நின்று மந்த்ரம் ஜபித்து , அந்தச் செடியின் ஆணிவேரை அறுத்து விடாமல் எடுத்து பயன்படுத்த வேண்டும்.

 *******

 பேதனம் மூலிகையில் ஒன்றான கோழியவரை எனும் மூலிகையை  பறிக்கும் முன் செடிக்கு திங்கள் கிழமை காப்புகட்டி சித்திரை நட்சத்திரத்தன்று  “ அரி அர தேவி , பிரம தேவி சர்வ தேவியே தீர் “ என்று செடியின் முன் நின்று மந்த்ரம் ஜபித்து , அந்தச் செடியின் ஆணிவேரை அறுத்து விடாமல் எடுத்து பயன்படுத்த வேண்டும்.

பேதனம் மூலிகையில் ஒன்றான செம்பசலை கீரை எனும் மூலிகையை  திருவாதிரை அன்று காப்பு கட்டி,  “ சீறியுங்  கீறியுங் சீறியும் “ என்று செடியின் முன் நின்று மந்த்ரம் ஜபித்து , அந்தச் செடியின் ஆணிவேரை அறுத்து விடாமல் எடுத்து பயன்படுத்த வேண்டும்.

பேதனம் மூலிகையில் ஒன்றான கீழாநெல்லி எனும் மூலிகையை  புதன் கிழமை  அன்று காப்பு கட்டி வியாழன் அன்று தேங்காய் உடைத்து அளமை பெறும் ,       “ பூமி வித்தேஷணி அஞ்சணி மூலி சகல சர்வ பழமை பல பதார்த்தத் தெரிய சுவாகா “ என்று செடியின் முன் நின்று மந்த்ரம் ஜபித்து , அந்தச் செடியின் ஆணிவேரை அறுத்து விடாமல் எடுத்து பயன்படுத்த வேண்டும். 

*******

மாரணம் மூலிகையில் ஒன்றான கார்த்திகை கிழங்கு எனும் மூலிகையை  கார்த்திகை நட்சத்திரத்தன்று மஞ்சள் நூல் காப்பு கட்டி ஆடு பலி கொடுத்து ,      “ சரவணபவா நமா “ என்று செடியின் முன் நின்று மந்த்ரம் ஜபித்து , அந்தச் செடியின் ஆணிவேரை அறுத்து விடாமல் எடுத்து பயன்படுத்த வேண்டும்.

மாரணம் மூலிகையில் ஒன்றான காஞ் சொறி வேர் எனும் மூலிகையை  பௌர்ணமிக்குப் பின் வரும் முதல் திதியில் காப்பு கட்டி மறுநாள் மத்தியானம்  அந்தச் செடியின் ஆணிவேரை அறுத்து விடாமல் எடுத்து நீரில் ஆட்டி சுத்தப்படுத்தி பயன்படுத்த வேண்டும். (மந்திரமில்லை)

 மாரணம் மூலிகையில் ஒன்றான நச்சுப்புல் எனும் மூலிகையை  மன மகிழ்வுடன்  பூஜை செய்து காப்பு கட்டி , “ விருகனீ விஷதரி “ என்று செடியின் முன் நின்று மந்த்ரம் ஜபித்து , அந்தச் செடியின் ஆணிவேரை அறுத்து விடாமல் எடுத்து பயன்படுத்த வேண்டும்.

சில காரணங்களுக்காக எல்லாவித  மூலிகைகளுக்கும் மந்திரங்கள் சொல்லப் படவில்லை.

முழு விபரமும் அறியவும் , பயன்படுத்தும் முறை தெரியவும்,  தகுந்த குரு வேண்டும்.

பயிற்சியில் முழுமை கண்டால் குருவே உங்களை வந்தடைவார் .

 ஸ்ரீ ஸ்ரீ மகா குரு அகஸ்திய பெருமானானவர் அஷ்ட கர்மாக்களுக்கும் உரிய கிழமைகளை சொல்லும் போது …

 வசியம் – ஞாயிறு , மோஹனம் – திங்கள் , பேதனம் – செவ்வாய் , ஸ்தம்பனம் – புதன் , உச்சாடனம் – வியாழன் , ஆக்ருஷ்ணம் – வெள்ளி , மாரணம் – சனி உகந்ததென்கிறார்.

 ஸ்ரீ ஸ்ரீ மகா குரு அகஸ்திய பெருமானானவர் அஷ்ட கர்மாக்களுக்கும் உரிய திக்குகளை குறிப்பிடும் போது …

 வசியம் – கிழக்கு , மோகனம் – வடக்கு  , பேதனம்  – வடகிழக்கு , ஸ்தம்பனம் – தென்மேற்கு , உச்சாடனம் – வடமேற்கு , ஆக்ருஷ்னம் – மேற்கு , மாரணம் – தெற்கு என உபதேசிக்கின்றார்.

 ·         மேலும் எல்லாவித கர்மங்களுக்கும் ஈசான்யம் சிறந்ததெனவும் அருள்பாலிக்கின்றார். 

 தீபங்களையும் , மந்த்ரங்களையும் குறிப்பிடும்போது :

 கிழமை : ஞாயிறு , வஸ்திரம் : சிவப்பு பட்டு , திசை : கிழக்கு நோக்கி  வில்வ மரப் பலகையில் அமர்ந்து , திரி : தாமரை நூல் ,நெய் : காராம் பசு (கருத்த நிற முள்ள பசு ) நெய் : தீபம் ஏற்றி யநமசிவ என்ற மந்த்ரத்தை லட்சத்தி எட்டு முறைகள் சொல்லி  ஜபம் செய்ய வசியம் சித்திக்கும் . 

கிழமை : திங்கள்  , வஸ்திரம் : மஞ்சள் பட்டு , திசை : வடக்கு நோக்கி  மான் தோலில் அமர்ந்து , திரி : கன்னி நூல் , எண்ணை : நல்லெண்ணெய் : தீபம் ஏற்றி மசிவயந என்ற மந்த்ரத்தை லட்சத்தி எட்டு சொல்லி முறைகள் ஜபம் செய்ய மோகனம் சித்திக்கும் .

கிழமை : செவ்வாய் , வஸ்திரம் : சாதாரண வெள்ளை  , திசை : வடகிழக்கு நோக்கி  பளிங்கு கல்லினால் ஆன ஆசனத்தில் அமர்ந்து , திரி : கந்தல் துணி  , எண்ணை : புன்னை எண்ணை : தீபம் ஏற்றி யவசிநம என்ற மந்த்ரத்தை லட்சத்தி எட்டு முறைகள் சொல்லி  ஜபம் செய்ய பேதனம் சித்திக்கும் .

 கிழமை : புதன் , வஸ்திரம் : சாதாரண பட்டு  , திசை : தென்மேற்கு நோக்கி  ஆல மர பலகையில் அமர்ந்து , திரி : எவ்விதமான திரியும் , எண்ணை : ஆதளைக் கொட்டை  எண்ணை : தீபம் ஏற்றி நமசிவய என்ற மந்த்ரத்தை லட்சத்தி எட்டு முறைகள் சொல்லி  ஜபம் செய்ய ஸ்தம்பனம் சித்திக்கும் .

 கிழமை : வியாழன் , வஸ்திரம் : பச்சை பட்டு  , திசை : வடமேற்கு நோக்கி பலா மர பலகையில் அமர்ந்து , திரி : இலவம்பஞ்சு , எண்ணை : புங்க எண்ணை : தீபம் ஏற்றி வயநமசி என்ற மந்த்ரத்தை லட்சத்தி எட்டு முறைகள் சொல்லி  ஜபம் செய்ய உச்சாடனம் சித்திக்கும் .

 கிழமை : வெள்ளி , வஸ்திரம் : சாதாரண பட்டு  , திசை : மேற்கு நோக்கி  சண்பக மர பலகையில் அமர்ந்து , திரி : வெள்ளெருக்கு நார் , எண்ணை : ஏரண்டத்தெண்ணை : தீபம் ஏற்றி வசியநம என்ற மந்த்ரத்தை லட்சத்தி எட்டு முறைகள் சொல்லி  ஜபம் செய்ய ஆக்ருஷ்ணம் சித்திக்கும் .

கிழமை : சனி , வஸ்திரம் : சாதாரண பட்டு  , திசை : தெற்கு நோக்கி  அத்தி மரத்தால் ஆன பலகையில் அமர்ந்து , திரி : வேலிப்பருத்தி , எண்ணை : வேப்ப எண்ணை : தீபம் ஏற்றி யசிவநம என்ற மந்த்ரத்தை லட்சத்திஎட்டு முறைகள் சொல்லி  ஜபம் செய்ய மாரணம் சித்திக்கும்.

 சில சூட்சும வார்த்தை விளக்கங்கள் :

கன்னி நூல் காப்பு கட்டி  என்பது தாமரை மொட்டு உள்ள (பூ பூக்கும் முன்  தண்டினை எடுத்து அதிலிருந்து எடுக்கும் (மகரந்த இழை) நூலினால் குறிப்பிட்ட மூலிகையில் மூன்று முறை சுற்றுவது .

மஞ்சள் நூலால் காப்பு கட்டி என்றால் விரலி மஞ்சளை முனை முறியாமல் எடுத்து அறைத்து அதில் மேற்படி கன்னி நூலை புரட்டி எடுத்து  பின்னர் உலர்த்தி வைத்துக் கொண்டு பயன்படுத்துவதாகும்.

 பொதுவான மூலிகை சாப விமோசன மந்திரம் .

  “ஓம் ஸ்ரீம் ஹ்ரீம்ஐம் க்லீம் ஸெளம்ஸர்வ மூலி சாபம் நாசய நாசய, சித்தர் சாபம் நாசய நாசய தேவ முனி , அசுர முனி சாபம் நாசய நாசய, ஸர்வ ஸர்ப்ப சாபம் நாசய நாசய ஹூம்பட் ஸ்வாஹா , என்பதாகும்.

 அன்பிற்குரிய நண்பர்களே ,

 யோகமும், சித்தும், மந்த்ரமும் , மாந்த்ரீகமும் நம் நலனுக்காக இறைவனால் உருவாக்கப்பட்டதேயன்றி பிறருக்கு தொல்லை கொடுக்க அல்ல என்பதனை உணர்ந்து செயல்படுங்கள்.

 “ இன்றைய விதைப்பு நாளைய அறுவடை என்பதை

எப்போதும் , எந்த நிலையிலும் மறக்கவேண்டாம் 

 மந்த்ரமும் மாந்த்ரீகமும் தொடர்ச்சி முடிவுற்றது .

 வளமோடு வாழுங்கள் , வாழும் நாளெல்லாம்.

                                                                                                   அன்புடன் கருணாகரன்.

பாபங்களும் பரிகாரங்களும்

 

அன்பு நண்பர்களே , வணக்கம் .

பாபங்களும் பரிகாரங்களும் ( நம்பிக்கை உள்ளவர்களுக்கு மட்டும்)

இப்போதெல்லாம் எல்லா கோவில்களிலும் மக்கள் கூட்டம் நிறைந்திருப்பதை காணமுடிகிறது , பெரும்பாலும் பிரதோஷம் , அதிலும் சனி பிரதோஷம் , திங்கள் கிழமையன்று வரும் சோமவார பிரதோஷம் நாட்களிலும் , தேய்பிறை அஷ்டமி நாட்களிலும் , அமாவாசை , பௌர்ணமி , க்ரஹணம் , வாராந்தரி இராகு காலங்கள், குறிப்பாக வெள்ளி , ஞாயிறு இராகு காலங்கள் என்பது போன்ற நாட்களில் மிக அதிக எண்ணிக்கையிலான மக்களை கோவில்களில் காண முடிகிறது.

பழம்பெரும் கோவில்களானாலும் , புதிதாக கட்டப்பட கோவிலானாலும் மக்கள் வழிபாட்டில் ஒரே மனதோடு வழிபடுகிறார்கள் என்பது மகிழ்ச்சியான சமாசாரம் .

இதற்கான மூல காரணம் என்னவென்றால் ,  

தனக்கோ , தனது குடும்பத்திற்கோ , தனக்கு தெரிந்தவர்களின் நலன் கருதியோ மக்கள், சில குறிப்பிட்ட நாட்களில் கோவிலுக்கு சென்று வழிபட்டால் தனது விருப்பம் நிச்சயம் நிறைவேறும் என்கிற அசைக்க முடியாத நம்பிக்கைதான் காரணம்.

நமது பாபங்களுக்கெல்லாம் நாமேதான் காரணம் ,  அதனால் நமது துன்பங்களுக்கெல்லாம் நாமே காரணமாகின்றோம் .

ஆனால் நான் யாருக்கும் எந்த தீங்கும் நினைக்கவில்லையே , எனக்கெப்படி பாபம் வரும் ? என்பது நமது கேள்வியாக இருந்தால் ! . . . .

பாபங்கள் என்பது  . . . . .என்ன ?

தாத்தா , பாட்டி , அப்பா, அம்மா, தம்பி , தங்கை , அண்ணன் , அண்ணி , நண்பன் , உற்றார் , உறவினர் என யாருடைய மனம் நோக , உடல் நோக நாம் நடந்தாலும் , நடந்திருந்தாலும் இவைகள் பாபம் தரும் செயல்களே . ஒருவன் செய்யாத தவறினை செய்தான் என சொல்லும் பொய்கள் கூட பாபங்களாகின்றன. பிச்சை இடுபவனை தடுப்பதுவும் பாபச்செயலே.

நாம் நமது கைகளின் பின் பக்கம் அதாவது புறங்கைகளை கழுவாததும் , கால்களை ஒன்றன்மேல் ஒன்றை தேய்த்து கழுவுவதும் , காது மடல்களை , மூக்கினை, பிறப்பு உறுப்பினை தினசரி சரியாக சுத்தம் செய்யாதது கூட பாபங்களாகும்.  ஆற்று நீரில் , கிணறுகளில் இறங்கி குளிக்கும் போது அதிலேயே சிறுநீர் கழிப்பதுவும் , மலம் கழிப்பதுவும் , வீட்டில் குளியலறையில் நிர்வாணமாக குளிப்பதும் ஒரு பாபச் செயலே!!

இவற்றைபோல இன்னும் ஏராளமாக சிறு சிறு பாபங்கள் பல உண்டு .

இவையெல்லாம் பாபங்களை நம்மோடு சேர்க்கும், அதனால் துன்பங்கள் விளையும். இதற்கான பரிகாரம் என்ன ?

இதுபோன்ற சிறு சிறு பாபங்களெல்லாம் தொடர்ந்து கோவில்களுக்கு சம்பந்தப்பட்டவரே சென்று வழிபடுவதாலும் , தாய் தந்தையரை வணங்கி வருவதாலும் , தனது நட்சத்திரத்திற்குரிய மரத்தை கோவில்களில் நட்டு தினசரி நீர் ஊற்றி வருவதாலும் , தனது நட்சத்திரத்திற்குரிய தானியத்தை தனது பிறந்த கிழமையன்று தானம் தந்து வருவதாலும் , குறிப்பிட்ட நாட்களில், தேர்ந்த பண்டிதர்களைக் கொண்டு நதிக்கரை ஓரங்களில் செய்யப்படும் பரிகாரங்களாலும் , இன்னும் பலவகை பரிகாரங்களாலும் தீர்வு காணலாம் .

அடுத்து . . .  

கொலை , களவு , பிற பெண்டிரை இச்சை கொள்ளுதல் , பசுவை கொள்ளுதல் , பசுவின் இறைச்சியை உண்ணுதல் , முன்பின் அறியாதவர்களுக்கு பணத்திற்காக துன்பம் விளைவித்தல் , நல்ல குடும்பத்தை பொல்லாங்கு சொல்லி பிரித்தல் , செய்வினை செய்தல் , செய்வினை செய்பவர்களுக்கு துணை போகுதல் , திருமணத்திற்கு முன் உறவு கொண்டு பின் வேறு ஒருவரை மணம் புரிதல் , திருமணத்திற்கு பின் வேறொரு பெண்ணை அல்லது ஆணை விரும்புதல் , தாயிடம் உறவு கொள்ளல் , தங்கை , அக்காள் போன்ற பெண்களோடு உறவு கொள்ளல் , மகளோடு , மருமகளோடு உறவு கொள்ளல் , கணவனை இழந்த பெண்களை ஆசைகாட்டி உறவு கொண்டு மோசம் செய்தல் , விருப்பம் இல்லாத நபர்களை மிரட்டி தனக்காக வேலை செய்யும்படி இம்சித்தல் , நம்பிக்கை துரோகம் செய்தல் , நன்றாக வளர்ந்து வரும் மரம் செடி கொடிகளை வெட்டி எறிதல் , அரச மரம் , வேப்ப மரங்களை வேரோடு வீழ்த்துதல் , கருவை கலைத்தல், கருவைக் கலைக்க துணை போகுதல் , தற்கொலை செய்து கொள்ளல் , தற்கொலைக்கு தூண்டுதல் போன்றவையும் கடுமையான பாபங்களாகும்.

இதற்கான பரிகாரம் :

இவைகளை போக்க தோஷத்தின் தன்மையை அறிந்து திருக்கோவில்களுக்கு தீர்த்த யாத்திரை மேற்கொள்வதும், அலகாபாத்தில் உள்ள திரிவேணி சங்கமத்தில் நீராடுதலும் , ஆயுஷ் ஹோமம் , சங்கு ஹோமம் , ஸ்ரீ சுயம்வர பார்வதி ஹோமம் ,    ஸ்ரீ காலபைரவ ஹோமம் ,  ஸ்ரீ அஷ்ட பைரவ ஹோமம் , ஸ்ரீ சண்டி ஹோமம் , ஸ்ரீ மகா சுதர்சன ஹோமம் ,          ஸ்ரீ மகா சுதர்சன மாலா மந்த்ர ஹோமம் , ஸ்ரீ துர்கா ஹோமம்,           ஸ்ரீ பிரத்யங்கரா ஹோமம் , ஸ்ரீ சரப ஹோமம் , ஸ்ரீ ருத்ர மகா ஹோமம், ஸ்ரீ ஏகாதச ருத்ர ஹோமம் போன்ற ஹோமங்களாலும் , யந்த்ரப் ப்ரதிஷ்டை செய்து நித்ய பூஜைகள் முறைப்படி செய்தும் இன்னும் உள்ள பலவிதமான  ஹோமங்களில் ஏதேனும் சிலவற்றை செய்தும் , பலவிதமான தானங்களும் செய்தும் சாந்தி பெறலாம் . 

அடுத்து . . .  

பிதுர் தோஷம், பிதுர் சாபம் , மாதுர் தோஷம் , மாதுர் சாபம் , குலதெய்வ தோஷம், குலதெய்வ சாபம் , கன்னிப் பெண் சாபம் , சுமங்கலி சாபம் , விதவையின் சாபம் , தாய்மாமன் சாபம் , புத்திர தோஷம், புத்திர சாபம், நாக தோஷம், நாக சாபம் , நவக்கிரக தோஷம் , நவக்கிரக சாபம் என்பது போன்ற தோஷங்களும், சாபங்களும் இன்னும் நிறைய உள்ளது. இவைகள் தலைமுறை தலைமுறைகளாக தொடர்பவை , மனித  இல்வாழ்வின் முன்னேற்றங்களை எல்லா வகையிலும் தடுப்பவை .

(நவக்கிரக தோஷம்-சாபம் என்பது மிக அரிதானது – பெரும்பாலும் ஜோதிடர்களுக்கு ஏற்படக்கூடியது)

மேலும் ஜோதிடர்களும் – சாதாரண மக்களும் கூட சில பல பரிகாரங்களை பலருக்கும் சொல்லி அவர்களுக்கு நிவாரணம் கிடைப்பதும் உண்டு , மேலும் சிலர் ஜோதிடர்களையே கூட புகழ்வதும் இகழ்வதும் உண்டு , இதுபோன்ற தோஷங்களும் பாபங்களும் டாக்டர்கள், வக்கீல்கள் நடிகர்கள் , நடிகைகள் அரசியல்வாதிகள் என பொதுநலம் நாடுவோர்களுக்கும் தோஷங்களும், சாபங்களும் , கண்ணேறு தோஷம் ஏற்படும் நிலை உள்ளது .

இவையெல்லாம் கூட தோஷங்களை சாபங்களை உருவாக்கும் வல்லமை படைத்தாகும். 

இவைகளை தீர்த்துக்கொள்ள , அலகாபாத்தில் உள்ள திரிவேணி சங்கமம்,  ராமேஸ்வரம் , காசி , காசியில் பஞ்ச கர்னிகா,  கயா , கங்கோத்ரி , யமுனோத்ரி , மந்தாகினி , அலகானந்தா , ருத்ரப் பிரயாகை , பல்குணி , திருஇடைமருதூர் , விருத்தாசலம் , தொழுதூர் , பம்பா போன்ற ஊர்களிலும் , நதிகளிலும் வேத விற்பன்னர்களைக் கொண்டு முறையான தோஷ நிவர்த்தி சாப நிவர்த்தி பரிகாரங்கள் செய்ய நிவாரணமாகும்.

மேலே சொல்லப்பட்டவைகள் அனைத்தும் மிகவும் கொஞ்சம் – இதுவும் பாபம் என்று தெரிந்து கொள்ள உதவும் . . . இவை சாம்பிள்தான் – சிறு சிறு உதாரணம்தான் . இவை போன்ற இன்னும் நிறைய பாபங்கள் உண்டு . அதற்கு பரிகாரங்களும் உண்டு .

சரி . சரி  . . . . .

சின்ன சின்ன பாபங்களுக்கு, தினசரி கோவில்களுக்கு செல்வதும் , கோவில்களில் ஹோமங்களும் , நதிக்கரை ஓரங்களில் பரிகாரமும் செய்தால் போதும் ,

கடுமையான தோஷங்களுக்கு தீர்த்த யாத்திரை செல்வதும் , வேதமறிந்த ஆச்சாரியர்களைக் கொண்டு பலவிதமான ஹோமங்களாலும் , யந்த்ர ப்ரதிஷ்டையும் , பலவிதமான தானங்களும் செய்து பரிகாரம் காணலாம் ,

பல தலைமுறைகளாக தொடரும் தோஷ , சாபங்களை பெரிய க்ஷேத்திரங்களில் வேத விற்பன்னர்களைக் கொண்டு தோஷ நிவர்த்தி, சாப நிவர்த்தி பரிகாரங்கள் , யந்த்ரப் ப்ரதிஷ்டை போன்றவைகளை செய்து நிவாரணம் காணலாம் .

இவையெல்லாம் உலகெங்கிலுமுள்ள மனிதர்களுக்கு உரியதாகும் .  

ஆனால் தோஷங்களையும் , சாபங்களையும் தீர்க்கும் மகா புண்ய க்ஷேத்திரங்களான ராமேஸ்வரம் , காசி , காசியில் பஞ்ச கர்னிகா,  கயா , கங்கோத்ரி , யமுனோத்ரி , மந்தாகினி , அலகானந்தா , ருத்ரப் பிரயாகை , பல்குணி , திருஇடைமருதூர் , விருத்தாசலம் , தொழுதூர் , பம்பா போன்ற புண்ய க்ஷேத்ரங்களில் வாழ்பவர்களால் , அங்கேயே உண்டாக்கப்படும் பாபங்களை எங்கு தீர்ப்பது , அங்கும் கொலை , கொள்ளை, கற்பழிப்பு போன்ற தகாத செயல்கள் நடைபெறுகின்றதே , கங்கைக்கு அருகில் வாழ்பவர்கள் அங்கேயே ஓடும் கங்கையிலோ அல்லது மற்றவர்கள் அவர்கள் வாழும் ஊரிலோ , அங்கு பாயும் நதிகளிலோ நீராடி தங்களின் பாபங்களை நீக்கிக்கொள்ள முடியுமா ? என்றால் . . . .

முடியாது .

அவர்கள் தங்கள் ஊர்களில் உள்ள கோவில்களிலோ , நதிகளிலோ சென்று எந்த பரிகாரம் செய்தாலும் அவர்களின் பாபங்கள் போகாது ,

அவர்களுக்கு ஏன் இந்த கடுமையான தண்டனை ?

அப்படியென்றால் அவர்களுக்கு என்னதான் வழி என்கிறீர்களா?

அவர்களுக்கும் பாபம் போக்கிக் கொள்ள வழி ஒன்று உண்டு .

அதாவது மேலே சொல்லப்பட்ட புண்ய க்ஷேத்ரங்களில் வாழும் அற்புதமான வாய்ப்பினை பெற்ற மனிதர்கள் , தங்களின் வாழ்வில் பாபங்களை செய்யும் போது கடுமையாக தண்டிக்கப்படுகிறார்கள் .

காரணம், அவர்கள் முற்பிறப்பில் தாங்கள் செய்த நற்செயலின் பயனாக  அவர்கள் புண்ய க்ஷேத்ரங்களில் வாழும் நற்பேறு எனும் வாய்ப்பினை இப்பிறப்பில் பெற்றிருக்கின்றார்கள் .

ஆனால் அந்த நன்நிலையை மறந்து , அங்கேயே பாபங்களிழைக்க அவர்கள் துணிந்ததனால் இயற்கையின் (இறைவனின்) கடும் சீற்றத்திற்கு ஆளான அவர்கள், 12 வருடங்களுக்கு ஒருமுறை கும்பகோணத்தில் நடைபெறும் மகாமக பெருவிழாவில் 10 நாட்கள் பங்கேற்று , ஆரம்பம் முதல் மகாமகம் இறுதிநாள் வரை , தினசரி மகாமக குளத்தில் நீராடி , அர்ச்சனை , அபிஷேகம், அன்னதானம் , வஸ்திரதானம் , மாங்கல்ய தானம் ரத்தின தானம் என பலவிதமான  தானங்கள் செய்து தன்வினையை தீர்த்துக் கொள்ளுதல் வேண்டும் என தர்ம பரிபாலன நூல் விரிவாக சொல்கிறது .

அதாவது அவர்கள் , தங்களது பாபங்களை போக்க நினைத்தாலும் உடனே போக்கிக் கொள்ள முடியாது.

எவ்வளவு பதவி , பணமிருந்தாலும் , எவ்வளவு பெரிய மகானாக இருந்தாலும் அதிக பட்சமாக 12 ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டும் . ஒரு மகாமக இடைவெளி 12 ஆண்டுகள் அல்லவா ? இயற்கை தனது தீர்ப்பினை எங்கே வைத்திருக்கிறது பார்த்தீர்களா?

முறையான உணவு வகைகளும் , முறையான வாழ்க்கைமுறைமையும் கொண்டு , தெய்வம் உண்டு (அதாவது மனிதத்தை மீறிய சக்தி ஒன்று உண்டு – அதனிடம் ஒரு நாள் நமது செய்யும் செய்கைகளுக்கு எல்லாம் நாம் பதில் சொல்லியே தீர வேண்டும்) எனும் பய உணர்வோடு வாழ்வோமானால் இப்பிறப்பில் நாம் வாழும் வாழ்வும், வரும் பிறப்பில் நாம் வாழும் வாழ்வும் நேர்த்தியாக அமையும் .

அதுமட்டுமல்ல நமது குழந்தைகளும் , பின் வரும் சந்ததிகளும் நோய் நொடியின்றி , நல்ல குணமும் , உயர்ந்த சிந்தனையுமுள்ள மனதோடு எல்லாவகை நலமும் பெற்று நீடுழி வாழ்வார்கள் என்பது சர்வ நிச்சயம் .

வளமோடு வாழுங்கள், வாழும் நாளெல்லாம்.                  அன்புடன் கருணாகரன்.  

மந்த்ரமும் மாந்த்ரீகமும் தொடர்ச்சி . . . 5

அன்பு நண்பர்களே, வணக்கம்.

மந்த்ரமும் மாந்த்ரீகமும் தொடர்ச்சி . . . 5

 

நாம் அறிந்து கொள்ள முற்படும் யோகம் மூலிகை மந்த்ரம் பகுதியில் மூலிகைகளை பயன்படுத்தும் விதம் பற்றிய பாகத்தை காணப் போகின்றோம்.

 

அதற்கு முன் . . . .

 

நண்பர்களின் மேலான கவனத்திற்கு . .

 

இந்த தொடரின் மூலமாக அடியேனிடமுள்ள (?) மூலிகைகளை விற்கவோ , அடியேனுக்கு தெரிந்தவர்களிடமுள்ள மூலிகைகளை விற்கவோ, அடியேனுக்கு தெரிந்தவர்களை அறிமுகப்படுத்தி வியாபாரம் செய்யவோ அல்லது அடியேன் யோகம் கற்று தருவதற்காக சீடர்களை என்னிடம் வரவழைப்பதற்காகவோ முயற்சிப்பதாக தயவு செய்து எண்ண வேண்டாம்.

 

இந்த கட்டுரையின் உள்நோக்கம் – இந்த தெய்வீக கலையின் அதியற்புத மேன்மைதனை உணரும் அன்பர்கள் இந்த தெய்வீக கலையின்பால் ஈர்க்கப்பட்டு இதனை கற்க முற்பட்டுவார்கள். அதனால் அவர்கள் நல்லதொரு குருவை தேடி அடைவார்கள். இந்த கலையினை உயிரென கற்று தேர்வார்கள் .

 

அதன்பயனாக அவர்கள் வாழும் ஊர் சிறப்புறும் , ஒரு ஊர் சிறப்புற்றால் , ஒரு நகரம் சிறப்புறும் , ஒரு நகரம் சிறப்புற்றால் , ஒரு மாநிலம் சிறப்புறும் , ஒரு மாநிலம் சிறப்புற்றால் , ஒரு நாடு சிறப்புறும் , ஒரு நாடு  சிறப்புற்றால் படிப்படியாக இந்த உலகமே அற்புத மாற்றம் காணும் என்கிற பேராசையினால் இந்த கலையின் மிக உள்ளார்ந்த சூட்சும ரகசியங்களைத் தவிர்த்து மற்றதை இங்கே பதிவிடுகின்றேன் .

 

இதுவரை இவ்வளவு விரிவாக யாரும் எழுதவில்லை என்பது

உங்களுக்கே தெரியும் .

 

காரணம் , அந்த அதி சூட்சும ரகசியங்களை மகாகுருவானவர் தொட்டு உணர்த்துவார், தழுவி உணர்த்துவார், பார்த்து உணர்த்துவார்.

 

இதனை இராமாயணத்தில் மகா குரு ஸ்ரீ ஸ்ரீ வால்மீகியானவர் ,

ஸ்ரீ ஸ்ரீ ராமர் பெருமான் மூலமாக ,

பார்த்து உணர்த்தியது – சீதைக்கு (நயன தீக்கை),

தொட்டு உணர்த்தியது – அகலிகைக்கு (ஸ்பரிச தீக்கை),

தழுவி உணர்த்தியது – குகனுக்கு (ஆலிங்கன தீக்கை) என மூன்று நிலைகளை உலகிற்கு அருளிச் செய்தார்கள்

 

அது ஒவ்வொருவர் தேக ஆரோக்கியம் மற்றும் பயிற்சியின் நிலைகளை பொறுத்து அமைகிறது .

 

இந்த தெய்வீக கலையின் உள்ளார்ந்த சூட்சும நிலைகள் அனைத்தும் ஸ்தூல தேகத்தின் உள் நிலையையே சார்ந்து இருப்பதால், ஸ்தூல தேகத்தினை முழுமையாக ஆராய்ந்தே பயிற்சியின் முதிர்வு வெளிப்படுகிறது .

 

ஆதலால் பயிற்சியினை மேற்கொள்ளும் மாணாக்கர்கள் ஸ்தூல தேகத்தினை முழுமையான சுத்தத்துடன் பராமரித்தல் மேலதிக அவசியமாகின்றது . எண்ணங்களில் தூய்மையும் , பக்தியும் , சாந்தமும் மிக அவசியம்.

 

கோபம் , காமம் , போதை வஸ்துகள், எரிச்சலடையும் தன்மை, முன் கோபம் ,

முரட்டு குணம் , எதிர்வாதம் , முரண்வாதம் , காழ்ப்புணர்ச்சியுடன் சமயம் பார்த்து இருத்தல் , உள்ளொன்றும் புறமொன்றுமாக வாழ்தல் , மறைவாக தவறு செய்தல் , பெண்களை பயமுறுத்தி உறவு கொள்ளுதல் , நைசாக பேசி உறவு கொள்ளுதல் , தன்னிடம் மகாசக்தி இருப்பதாக சொல்லி உறவு கொள்ளுதல் , பிற பெண்களுடன் வைத்துக்கொள்ளும் தவறான உறவுகள் போன்ற பழக்க , வழக்க , குணங்களை அறவே கலைந்திடல் வேண்டும்.       ( இதுவரை இருந்தால் ).

இது போன்ற தவறான பழக்கங்களுடன் இந்த தெய்வீக கலையை பயில்வோர் , தீர்க்க முடியாத தோஷங்களோடும் , குலத்திற்கே நாசம் விளைவிக்கும் பிள்ளைகளை பெற்றும், வாழ்வில் ஒவ்வொரு நொடியும் மரணம் வந்தால் போதும் என்று எண்ணும் எண்ணத்துடனே வாழ்வார்கள்.

மேலும் சொப்பனஸ்கலிதம் (உறக்கத்தில் விந்து வெளியேறுதல்) ,

தவறான தனது செய்கைகள் வாயிலாக விந்துவை வெளியேற்றுதல் போன்றவை மாணாக்கனின் உயர்வு நிலையின் எல்லா வழிகளையும் மூடிவிடும்.

 

பழமொழி : விந்து விட்டவன் நொந்து கெட்டான் .

 

காம எண்ணங்களையும் , காம எழுச்சியை தூண்டும் காட்சிகளையும் , காமத்தை தூண்டும் விதமான பேச்சுகளையும் அறவே தவிர்க்கவேண்டும். அது போன்ற எண்ணங்களை பேசி உருவாக்கும் நண்பர்களிடமிருந்து விலகுங்கள்.

 

இவை கொஞ்சமே , இதனைப் போல இன்னும் பல நுணுக்கமான உள்ளார்ந்த ரகசிய அறிவுறுத்தல்கள் உள்ளது .

 

இதனை ஒரு குரு உடனிருந்து கற்றுத் தருதல் அவசியம்.

குரு வேண்டும் என்று சொல்வது அதற்குதான்.

 

மேலும் இது இன்ஸ்டன்ட் காலம், அதைப்போல இன்று துவங்கி நாளை உங்களிடம் மாற்றங்கள் தோன்றாது , மெல்ல மெல்லதான் எல்லாம் மாறும் பொறுமையும் , விடாமுயற்சியும் , தீவிர பயிற்சியும் மிக அவசியம் .

 

இன்றைய காலச் சூழலில் ஏதோ ஒரு வகையில் சுயமாக பாதிக்கப்பட்டவர்கள், இதனை கற்றுக்கொண்டோ அல்லது இதனை கற்றவர் மூலமாகவோ தனது எதிர்ப்பாளர்களை (விரோதிகளை) அது , மனைவி, மகள், மகன், அப்பா, அம்மா சகோதர , சகோதரி என தனது உற்றார் உறவினருக்கு , நண்பர்களுக்கு அல்லது வேறு நபருக்கு ஏதாவது ஒரு வகையில் துன்புறுத்தல் தர எண்ணுகிறார்கள் என்பது சிலநாட்களாக அடியேனுக்கு வருகின்ற மெயில் மூலமும், கைப்பேசி அழைப்பிலும் தெரிகிறது .

 

இதன்மூலம் என்னை உங்களுக்கு அறிமுகப்படுத்தி வியாபாரம் செய்ய முயற்சிக்கவில்லை , என்னை நேரில் சந்திப்பதாலோ , தொலைபேசியில் தொடர்பு கொள்வதாலோ எந்த பயனும் இல்லை . எதனையும் அடியேன் யாருக்கும் சொல்லித்தர இயலாது.

வழியை காட்டுகிறேன் பிடித்து கொண்டு முன்னேறுங்கள் , அடியேனையே குருவாக இருந்து எனக்கு மட்டுமாவது சொல்லிக் கொடுங்கள் என்பது போன்ற வாசகங்கள் பேசவேண்டாம் .

இதனை படித்து இதன் தெய்வீக தன்மையை புரிந்து இந்த அதியற்புத தெய்வீக கலையை நன்கு உணர்ந்து இதனை பயிலுங்கள் , உயருங்கள் , நீங்கள் உயரவேண்டும் என்பதே எனது குறிக்கோள்.

 

ஸ்படிகம் போன்ற தெளிந்த மனமும், தீவிரமான பயிற்சியும் ஒரு தெய்வீக குருவை உங்களிடம் கொண்டு வந்து சேர்க்கும் . குருவே உங்களை தேடி வரும்வரை பயிற்சியில் இருங்கள் .

 

ஒன்றை தெளிவாக புரிந்து கொள்ளுங்கள் நண்பர்களே,

 

இந்த தெய்வீக கலையின் அருமையை தெரிந்து , முழுமையாக யோகப்பயிற்சி பெற்றவர்கள் , அதனை உயிர் மூச்சென உணர்ந்தவர்கள் , யாருக்கும் எந்தவிதமான மந்த்ர துஷ்ப்ரயோகமும் செய்ய முன் வரமாட்டார்கள். அப்படி வருபவர்கள் கலையை முழுமையை அறியாதவர்களாகவே இருக்கமுடியும் , அவர்களால் உங்கள் அபிலாஷையை நிறைவேற்ற முடியாது , ஆனால் முடித்து தருவதாக சொல்லிச் சொல்லி உங்களின் பணத்தை வாங்கிக் கொள்வார்கள் . கடைசியாக ஏதாவது ஒரு காரணம் சொல்லி முடியாது என்பார்கள்.

( முக்கியமாக நீங்கள் செய்த ஏதாவது காரியம் ஒன்றை சொல்லி அதுதான் காரணம் என்று கூறுவார்கள், பழியை உங்கள் மேலேயே போட்டு விடுவார்கள் , நீங்களும் செய்ய சொன்ன வேலை தப்பானது என்பதால் இதனை யாரிடமும் சொல்லமாட்டீர்கள், இப்படித்தான் இன்றைய சித்தும் , யோகமும் போகின்றது ) அடியேனிடம் கேட்பவர்களின் எண்ணமும் இப்படித்தான் இருக்கின்றது .

 

யோகமும், சித்தும், மந்த்ரமும் , மாந்த்ரீகமும் நம் நலனுக்காக இறைவனால் உருவாக்கப்பட்டதேயன்றி பிறருக்கு தொல்லை கொடுக்க அல்ல என்பதனை உணர்ந்து செயல்படுங்கள்.

 

“ இன்றைய விதைப்பு நாளைய அறுவடை என்பதை

எப்போதும் , எந்த நிலையிலும் மறக்கவேண்டாம்

 

பணத்திற்காக பிறருக்கு தொல்லை தருபவர்கள் மிக மோசமான மறுபிறவிக்கு இன்றே பதிவு செய்கிறார்கள் என்பதனை மறக்க வேண்டாம். ஆகவே தவறான சிந்தனையை கனவிலும் எண்ண வேண்டாம் . உங்கள் வாழ்வு சிறக்கவே இவ்வளவும் எழுதுகிறேன் , அடுத்த பதிவினில் மூலிகை பற்றிய தொடர்ச்சியை காணலாம் .

அடியேனுக்கு நேரிலும் , மெயிலிலும் , தொலைபேசியிலும் வந்தவிசாரிப்புகளினாலேதான் இந்த பதிவிடவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

 

வளமோடு வாழுங்கள் , வாழும் நாளெல்லாம்.

கருணாகரன்.

மந்த்ரமும் மாந்த்ரீகமும் தொடர்ச்சி . . . 4

அன்பு நண்பர்களே , வணக்கம்.

மந்த்ரமும் மாந்த்ரீகமும் தொடர்ச்சி . . . 4

 

நாம் அறிந்து கொள்ள முயலும் இந்த யோகம் மூலிகை மந்த்ரம் பகுதியில் மூலிகைகளை பற்றிய பாகத்தை இப்போது காணப் போகின்றோம் .

 

அஷ்டமா சக்திகளில் ;

அஷ்டமா கர்மாக்களுக்கும் , அஷ்டமா சித்திகளுக்கும் மூலிகைகளின் பங்களிப்பு அதிகம் உள்ளது .

 

மூலிகை என்றவுடன் இதெல்லாம் எங்கோ வனாந்திர பிரதேசத்தில் கிடைக்கும் தாவரங்கள் என்று எண்ணி கலங்க வேண்டாம் , ஒருசில மூலிகைகளைத் தவிர  மற்றவையெல்லாம் பெரும்பாலும் நம்மைச் சுற்றி வளர்ந்திருக்கும் தாவரங்களின் தொகுப்புதான் .

 

நம்மை அலைய விட்டு பார்ப்பதில் சித்தர் பெருமக்களுக்கு ஆவலில்லை . நம்மை சோதித்து பார்ப்பார்கள் , அதில் நாம் தேர்ச்சி அடைந்து அவர்களின் அன்பை பெற்று, நமக்கு அருள்பாலிக்க துவங்கி விட்டால் அவர்கள் தருவதை யாராலும் நிறுத்த முடியாது.

 

ஒரு கர்மாவுக்கு எட்டு மூலிகைகளை ஸ்ரீ ஸ்ரீ அகஸ்தியர் பெருமான் அவர்கள் உபதேசிக்கின்றார்.

 

எட்டு கர்மாக்களுக்கும்  8 X 8 = 64 மூலிகைகள் ஆகின்றன .

 

அஷ்டகர்மாக்கள் என்றால் என்னென்ன என்பதை சென்ற பகுதியில் கண்டோம் அதனை மீண்டும் உங்கள் நினைவிற்கு . . . . .

 

1. வசியம் என்றால், ஆகர்ஷனம் , மோகனம் , வசியம் மூன்றும் ஒன்றுபோல தோன்றும். ஆனால் வேறு வேறாகும்.

 ஆகர்ஷனம் தன்னை நோக்கி இழுப்பது, மோகனம் மயங்கச் செய்வது, வசியம் தனது வசீகரத்தன்மையில் , தான் சொன்னதை சொல்லி, செய்ததை செய்யும் தன்மையுள்ளவர்களாக மற்றவர்களை மாற்றுகிறது மேலும் வசியம் செய்தவரின் எண்ணத்தை மீறி வசியம் செய்யப்பட்டவர் எதுவுமே செய்ய முடியாமல் போகின்றது.

 

2. மோகனம் என்றால், மயக்குவது . தன்னிடம் மயங்கச் செய்வது , தான் சொல்வதை மற்றவர்களை கேட்க செய்வது.

 

3. உச்சாடனம் என்றால், தனது மந்த்ர சக்தியால் தன்னுடைய நோய் , கடன் , பேய், பிசாசு , பூதம் , எதிரிகள் போன்ற தீய சக்திகளை மிரட்டி தன்னிடம் நெருங்க விடாமல் துரத்துவதாகும் .

 

4. ஸ்தம்பனம் என்றால், ஒன்றைக் கட்டுப்படுத்தி நிற்கச் செய்து இதில் பாய்ந்து வரும் அம்பைக்கூட அப்படியே நிறுத்தலாம் என்கிறார். காற்றை , நீரை , ஸ்தம்பிக்க செய்து அதன் மீது அமரலாம் , நீர்த்தன்மை உடைய பொருட்களை கட்டியாக கூட உறையச் செய்யலாமாம். 

 

5. ஆகர்ஷனம் என்றால், தன்னை நோக்கி இழுத்துக் கொள்ளுதல். மனிதர்கள் , மிருகங்கள், பொருட்கள் போன்ற எல்லாவற்றையும் தன்பால் இழுக்கலாம். ஒருவர் சாதகனுக்கு எதிராக பயன்படுத்த நினைக்கும் எந்தவிதமான பொருள்களையும் , அவரிடம் அகப்படாமல் தன்னை நோக்கி வரச் செய்து தன்னை காத்துக்கொள்ளலாம்.

 

6. வித்துவேடனம் என்றால், ஒருவரை ஒருவர் வெறுக்கச் செய்வது , பகைமை உண்டாக்குவது , எது தனக்கு வேண்டாததோ அதனை , தன்னை விட்டு விலகி ஓடச் செய்வது. ( தன்னிடமுள்ள தீய எண்ணங்கள் , தீய பழக்கங்கள் போன்றவை ).

 

7. பேதனம் என்றால், வேறுபடுத்துவது , பிரிப்பது . (நண்பர்கள் , கணவன் மனைவி , தாய் குழந்தையைப் பிரிப்பது போன்ற பாதகமான செயல்கள் நம்மை இம்மையிலும் , மறுமையிலும் தீராத பாபம் தரும்.) நம்முடைய அறியாமை, நோய், மற்றவர்களுக்கு உள்ள நோய் முதலியவைகளை வேறுபடுத்தவும், ஊரை மிரட்டும் கொள்ளையர்கள் போன்ற கூட்டத்தினரை பிரிக்கவும் பயன்படுத்தலாம்.

 

8. மாரணம் என்றால், அழிப்பது, கொல்வது . மனிதர்கள் , தனக்குள்ளும் , வெளியிலும் இருக்கும் தீய சக்திகளை அழிப்பதற்காகவே ஏற்பட்டது .

 

இதற்குரிய மூலிகைகளை காண்போம்.

 

1. வசியம் எனும் கர்மாவிற்குரிய மூலிகைகள் 

இதற்கு உபயோகிக்கும் எட்டுவிதமான மூலிகைகள்

1. சீதேவிச் செங்கழுநீர், 2.  நில ஊமத்தை,

3. வெள்ளை விஷ்ணுகிரந்தி, 4. கருஞ்செம்பை,

5. வெள்ளை குன்றி மணி, 6. பொன்னாங்கன்னி,

7. செந்நாயுருவி, 8. வெள்ளெருக்கு என்பதாகும் .

இதில் வெவ்வொரு விதமான வசியங்கள் உண்டு .


 இராஜ வசியத்திற்கு – சீதேவி செங்கழுநீர்,
 பெண் வசியத்திற்கு – நிலவூமத்தையும்,
 லோக வசியத்திற்கு – வெள்ளெருக்கும்,
ஜன வசியத்திற்கு – கருஞ்செம்பை, விஷ்ணுகிராந்தியும்,
விலங்கு வசியத்திற்கு – வெள்ளை குன்றி மணியும்,
தேவ வசியத்திற்கு – பொனனாங்கன்னியும்,
சாபம், வழக்குகள் ஜெய வசியத்திற்கு செந்நாயுருவியும்

பங்கு வகிக்கின்றன.

 

2. மோகனம் எனும் கர்மாவிற்குரிய மூலிகைகள்

இதற்கு உபயோகிக்கும் எட்டுவிதமான மூலிகைகள்

1. பொன்னூமத்தை, 2. கஞ்சா வேர்,

3. வெண்ணூமத்தை, 4. கோரைக்கிழங்கு,

5. மருளூமத்தை, 6. ஆலமர விழுது,

7. நன்னாரி, 8. கிராம்பு என்பதாகும்.

இதில் வெவ்வொரு விதமான மோகனங்கள் உண்டு .


 பெண்களை மோகனம்  செய்ய  பொன்னூமத்தையும் ,
 பொதுமக்களை மோகனம்  செய்ய – கஞ்சா வேரும்,
 உலகத்தை மோகனம்  செய்ய – வெண்ணூமத்தையும்,
 விலங்குகளை மோகனம்  செய்ய – கோரைக்கிழங்கும் 
 தேவதைகளை மோகனம்  செய்ய – மருளூமத்தையும்,
 அரசர்களை மோகனம்  செய்ய   ஆலம்விழுதும்,
 மனிதர்களை மோகனம்  செய்ய  –  கிராம்பும்,
 எல்லாவற்றையும் மோகனம்  செய்ய – நன்னாரியும்.

பங்கு வகிக்கின்றன

 

3. உச்சாடனம் எனும் கர்மாவிற்குரிய மூலிகைகள்

இதற்கு உபயோகிக்கும் எட்டுவிதமான மூலிகைகள்

1. பேய் மிரட்டி,  2. மான்செவிக் கள்ளி,

3. தேள்கொடுக்கி, 4. கொட்டைகரந்தை,

5. வெள்ளை கண்டங்கத்திரி, 6. மருதோன்றி,

7. பிரமதண்டு, 8. புல்லுருவி என்பதாகும்.

இதில் வெவ்வேறு விதமான உச்சாடனங்கள் உண்டு .

பிறர் நமக்கு செய்யும் தீமைகளை விரட்ட – பிரமதண்டும்.
மிருகங்களை விரட்ட – பேய்மிரட்டியும்.

எதிரிகளை விரட்ட மான்செவிக் கள்ளியும்.

உடலில் ஏறிய விஷங்களை விரட்ட – தேள்கொடுக்கியும்.

நீர்வாழ் உயிரனங்களை விரட்ட – கொட்டைகரந்தையும்.
கால்நடைகளை விரட்ட – வெள்ளை கண்டங்கத்தரியும்.
 பூத பைசாசங்களை விரட்ட – மருதோன்றி, புல்லுருவியும்

பங்கு வகிக்கின்றன.

 

4. ஸ்தம்பனம் எனும் கர்மாவிற்குரிய மூலிகைகள்

இதற்கு உபயோகிக்கும் எட்டுவிதமான மூலிகைகள்

 

1.  கட்டுக்கொடி, 2.  பால்புரண்டி,

3.  பரட்டை, 4. நீர்முள்ளி,

5. நத்தைச்சூரி, 6.  சத்தி சாரணை,

7. பூமி சர்க்கரைகிழங்கு ,8. குதிரைவாலி  என்பதாகும்.

 

இதில் வெவ்வேறு வகையான ஸ்தம்பனங்கள் உண்டு.


 தண்ணீரைக்கட்டி அதன் மேல் அமர  – கட்டுக்கொடியும்,
 பெண்களின் முலைபாலை கட்ட – பால்புரண்டியும்,
 வயிற்றுப் போக்கை நிறுத்த  – பரட்டையும்,
 கற்களை கறைக்க – நத்தைச்சூரியும்
 செயல்களை செயல்படாமல் கட்ட – சத்திசாரணையும்,
திரவத்தை கட்டி திடமாக்க  – பூமி சர்க்கரை கிழங்கும்,

                        விந்துவை  கட்ட – கட்டுக்கொடி, பால்புரண்டி, நீர்முள்ளியும்,
கருப்பையில் உள்ள கருவை கட்ட குதிரைவாலியும்

பங்கு வகிக்கின்றன  

5. ஆகர்ஷனம் எனும் கர்மாவிற்குரிய மூலிகைகள்

இதற்கு உபயோகிக்கும்  எட்டுவிதமான மூலிகைகள்

1. தூதுவளை, 2. உள்ளொட்டி,

3. புறவொட்டி, 4.சிறு முன்னை,

5. குப்பைமேனி, 6. அழுகண்ணி,

7. சிறியாநங்கை, 8. எருக்கு என்பதாகும்.

இதில் பல்வேறு ஆகர்ஷனங்கள் உள்ளன

        மிருகங்களை ஆகர்ஷிப்பதற்கு – தூதுவளை, குப்பைமேனியும்,
 பெண்களை ஆகர்ஷிப்பதற்கு –  உள்ளொட்டி, அழுகண்ணியும்,
 அரசர், பிரபுக்ளை ஆகர்ஷிப்பதற்கு சிறுமுன்னையும்,
 துர்தேவதைகளை ஆகர்ஷிப்பதற்கு புறவொட்டியும,
 தேவதைகளை ஆகர்ஷிப்பதற்கு எருக்கும்,
அனைத்து ஆகர்ஷிப்பதற்கு சிறியாநங்கையும்

பங்கு வகிக்கின்றன

6. வித்துவேடனம் எனும் கர்மாவிற்குரிய மூலிகைகள்

இதற்கு உபயோகிக்கும்  எட்டுவிதமான மூலிகைகள்

1. கருங்காக்கணம், 2. வெள்ளை காக்கணம்,

3. திருகு கள்ளி, 4. ஆடுதின்னாபாளை,

5. பூனைக்காலி, 6. கீழாநெல்லி,

7. ஏறண்டம், 8. சிற்றாமணக்கு என்பதாகும்.

இதில் பலவகையான வித்துவேடனங்கள் உண்டு .


 கொள்ளையர்களுக்குள் பகை உண்டாக்க கருங்காக்கணமும்,
 தேவர்களுக்கு மனிதர்கள் பாலுள்ள கோபம் நீக்க

 வெள்ளைக் காக்கணம், திருகுகள்ளியும்,
பூத, பைசாசங்களுக்குள் பகை உண்டாக்க – ஆடுதின்னாபாளையும்,
மனிதர்களுக்கு உண்டான நோய் நீக்க  –  பூனைக்காலியும்,
எதிரிகளால் உண்டாகும்  ஆபத்தை  தடுக்க – கீழாநெல்லியும்,
விஷ உணவை உண்ணாமல் செய்ய சிற்றாமணக்கும்

பங்கு வகிக்கின்றன .

 

7. பேதனம் எனும் கர்மாவிற்குரிய மூலிகைகள்

இதற்கு உபயோகிக்கும்  எட்டுவிதமான மூலிகைகள்.

1. வட்டதுத்தி, 2. செம்பசலை,

3. மாவிலங்கு, 4. பாதிரி,

5. கோழியாவரை, 6. சீந்தில்கொடி,

7. சங்கன் வேர், 8. ஆகாயதாமரை என்பதாகும்.

இதில் பலவகையான பேதனங்கள் உண்டு .


 நெருப்பின் உக்கிரத்தை பேதிக்க வட்டதுத்தியும் ,
 மனிதனின் தீய எண்ணத்தை பேதிக்க செம் பசலையும்,
 பூத, பிசாசுகளை பேதிக்க – மாவிலங்கு, பாதிரியும்,
 துர்தேவதைகளை பேதிக்க கோழி அவரைக்கொடியும்,
 எதிரிகளை பேதிக்க – சீந்தில்கொடியும்,
 பெண்களை பேதிக்க சங்கன் வேரும்,
 வியாதிகளை பேதிக்க ஆகாயத் தாமரையும்

பங்கு வகிக்கின்றன.

8. மாரணம் எனும் கர்மாவிற்குரிய மூலிகைகள்

இதற்கு உபயோகிக்கும்  எட்டுவிதமான மூலிகைகள்.

1. நச்சுப்புல், 2. நீர்விஷம்,

3. சித்திரமூலம், 4. அம்மான் பச்சரிசி,

5. கார்த்திகை கிழங்கு, 6. மருதோன்றி,

7. காஞ்செறிவேர் , 8. நாவி  ஆகும்.

இதில் பலவகையான மாரணங்கள் உண்டு


 மனிதர்களை மாரணம் செய்ய – நச்சுப்புல், நீர்விஷமும்,
 வியாதிகளை மாரணம் செய்ய  – சித்திரமூலம், காஞ்செறிவேரும்,
 கண்ணாடிகளை உடைக்க – அம்மான் பச்சரிசியும்,
 மிருகங்களை  மாரணம் செய்ய – மருதோன்றி, கார்த்திகை கிழங்கும் பங்கு வகிக்கின்றன.

ஒரு சில நன்மைகளை கருத்தில் கொண்டு அனைத்து மூலிகைகளின் வேறு பெயர்கள் இங்கே தரப்படவில்லை .

இந்த குறிப்பிட்ட மூலிகைகளுக்கும் , அதன் தொடர்பான கர்மாக்களுக்கும் மிகுந்த இசைவு உள்ளதை அரும்பாடுபட்டு கடுமையான விரத , அனுஷ்டானங்களை , பயிற்சியை செய்து மகரிஷிகளும் , சித்தர்பெருமக்களும் , ஞானிகளும் கண்டறிந்து உலகிற்கு மனிதர்களின் நன்மையை கருதி அருள் செய்திருக்கின்றார்கள் .

இவைகளை அவர்களின் நோக்கத்தினை ஒட்டியே அதாவது சக மனிதரை இம்சிக்காமல் எல்லோரையும் தன்னைப்போலவே எண்ணி எல்லோருக்கும் நன்மைகளை செய்யும் பொருட்டு பயன்படுத்தினால் இப்பிறவி மட்டுமல்ல எப்பிறவியிலும் க்ஷேமமாக வாழலாம் .

பிற உயிர்களுக்கு ஏதேனும் ஒரு வழியில் சங்கடம் ஏற்படுத்தினாலும் மனிதரது இப்பிறவி மட்டுமல்ல எப்பிறவியிலும் பிறந்து எல்லோராலும் இகழ்ந்து பேசப்படும் பிறப்பாகி அல்லல்பட நேரிடும் என்பதை மறக்க வேண்டாம் .

இப்பிறப்பின் பேரிடர் நீக்க உருவான இந்த கலைதனை சக மனிதர்களின் வாழ்வின் நன்மைகளை கருதியே இங்கே விரிவாக பதிவிடுகின்றோம்.

இதனை தவறான காரியங்களுக்கு பயன்படுத்தி , இப்பிறவியையும் வரும் பிறவிகளையும் துக்க சாகரத்தில் (துயர கடலில்) மூழ்கடித்துக் கொள்ள வேண்டாமென பரிவுடன் , உரிமையாக , அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் .

இந்த மூலிகைகளை நாம் கண்டவுடன் பறிக்கலாகாது , அதற்குரிய சாப நிவர்த்தி மந்த்ரங்களை சொல்லிய பின்தான் எடுக்கவேண்டும்.

தவறான சிந்தையுள்ள மனிதர்களின் கையில் இவைகள் கிடைத்தால் அவர்கள் அதனை துஷ்பிரயோகம் செய்ய வாய்ப்புண்டு என்பதால் மகரிஷிகளும் , சித்தர்களும் , ஞானிகளும் இவை சம்பந்தமான அனைத்தையும் மறை பொருளாகவே குறிப்பிட்டுள்ளார்கள்.

நற்குணம் , நல்லெண்ணம் , பரோபகார சிந்தையும் உள்ளவர்கள் , லோக க்ஷேமம் கருதி தேடினால் இந்த மூலிகைகள் தன்னைத்தானே வெளிப்படுத்தும் என்கிறார் ஸ்ரீ ஸ்ரீ அகஸ்தியபெருமான் அவர்கள்.

(இதனை படிக்க நேர்பவர்களில் யாரேனும் அப்படி இருக்க மாட்டார்களா எனும் பேராவலில் (பேராசையில்) இதனை என்னுள் புதையாமல் வெளிப்படுத்துகிறேன், அடியேனை நேரிலோ , தொலைபேசியிலோ தயவு செய்து தொடர்பு கொள்ள வேண்டாம் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். (ஓம் சத்குருவே தத் சத் ஓம்)  

  

ஒவ்வொரு மூலிகைக்கும் அதனை நாம் எடுத்துக்கொள்வதற்கு குறிப்பிட்ட நாளும் , நட்சத்திரமும், மந்திரமும் உண்டு .

மூலிகை சாபம் நீக்கவும் , எடுக்கவும் என்ன செய்ய வேண்டும் , எப்போது செய்ய வேண்டும் , எப்படி செய்ய வேண்டும் என்பதனை அடுத்த பதிவினில் விரிவாக பார்ப்போம்.  

 

வளமோடு வாழுங்கள் வாழும் நாளெல்லாம்.

அன்புடன் கருணாகரன் .

 

மந்த்ரமும் மாந்த்ரீகமும் தொடர்ச்சி . . 3

அன்பு நண்பர்களே வணக்கம்.

அஷ்ட கர்மாக்களை என்னெவென்று பார்க்கு முன் அதனைப் பற்றிய முழுவிளக்கம் அவசியமாகின்றது , காரணம் ஒரு பயிற்சியின் அல்லது படிப்பின் அவசியமும் , காரணமும் , வரலாறும் தெரிந்தால் அதனை கற்றுக்கொள்ள ஆர்வமும் , கற்றுக் கொண்டே தீரவேண்டும் என்கிற உத்வேகமும் நம்முள் இயல்பாக உருவாகும்.

இப்போது கர்மாக்களை தெரிந்துகொள்ள துவங்குவோம் .

ஒன்று என்பது பிரதமை என்றும்

இரண்டு என்பது துதியை என்றும்

மூன்று என்பது திரிதியை என்றும்

நான்கு என்பது சதுர்த்தி என்றும்

ஐந்து என்பது பஞ்சமி என்றும்

ஆறு என்பது சஷ்டி என்றும்

ஏழு என்பது சப்தமி என்றும்

எட்டு என்பது அஷ்டமி என்றும்

ஒன்பது என்பது நவமி என்றும்

பத்து என்பது தசமி என்றும்

பதினொன்று என்பது ஏகாதசி என்றும்

பனிரெண்டு என்பது துவாதசி என்றும்

பதிமூன்று என்பது திரயோதசி என்றும்

பதினான்கு என்பது சதுர்த்தசி என்றும்

பதினைந்து என்பது அமாவாசை அல்லது பௌர்ணமி என்றும் அழைக்கப்படுகின்றது.

பொதுவாகவே அமாவாசை ஆண்களையும் , பௌர்ணமி பெண்களையும் அதிகம் தொடர்பு கொண்டுள்ளதாக அறிகிறோம்.

பௌர்ணமியில் நீர்நிலைகளில் பௌர்ணமியின் (குளுமை)ஆதிக்கம் அதிகம் இருப்பதை எல்லோரும் சாதாரணமாக காணலாம் .

அமாவாசை காலங்களில் பெரும்பாலும் மனஅமைதியற்ற(இறுக்கமான)சூழல் காணப்படுவதுண்டு.

ஆனால் ஒரு சில பூஜைக்குரிய துவக்கத்தினை சிலர் இந்நாளில் (அமாவாசையில்) துவக்குவதுண்டு .

இந்த யோகம் தனை ஆண் பெண் என பாகுபாடின்றி யாரும் பயில முடியும் , இதில் ஆணிலும் விட பெண்கள் மிக விரைவாக முன்னேற்றமும் உயர்நிலையை அடைகின்றார்கள் என்பது அனுபவ உண்மை.

காரணம் பெண்கள் இயல்பாகவே பிராண சக்தியின் வடிவமாக உள்ளதுதான். அதனால் அவர்கள் முயன்றால் போதும், அந்த உயர்நிலை அவர்களை தேடி வந்து அடைந்து விடுகிறது .

சரி கர்மாகளுக்கு வருவோம் .    

இந்த கர்மாக்கள் எட்டு என்கிற எண்ணிக்கையில் இருப்பதால் இதனை அஷ்ட கர்மா (எட்டு தொழில்) என்றழைக்கிறோம்.

இவைகள் முழுக்க மனித மனநிலை மேன்மை பெறவே உருவாக்கப்பட்டது . இந்த கர்மாக்களை மிகவும் சிரத்தையாகவும் உள்ளார்ந்த உத்வேகத்தோடும் பயிலுவோர் தங்களது தலைவிதியை தாங்களே தீர்மானிக்கும் நிலையினை அடைகிறார்கள் என்கிறார் இறைவனார் .

இவ்வளவு சிறப்பினையும் ஒருங்கே பெற்ற இந்த அஷ்டமா சக்திகளின் ஒரு பகுதியான அஷ்ட கர்மாக்கள் என்பது முறையே ,

 

1. வசியம்

2. மோகனம்

3. உச்சாடனம்

4. ஸ்தம்பனம்

5. ஆகர்ஷனம்

6. வித்துவேடனம்

7. பேதனம்

8. மாரணம்            என்பது ஆகும்

இந்த அஷ்ட கர்மாக்களின் சக்தி மிகுந்த செயல்பாடுகள் என்னென்று பார்ப்போம் .

 

1. வசியம் என்றால், ஆகர்ஷனம் , மோகனம் , வசியம் மூன்றும் ஒன்றுபோல தோன்றும். ஆனால் வேறு வேறாகும்.

 ஆகர்ஷனம் தன்னை நோக்கி இழுப்பது, மோகனம் மயங்கச் செய்வது, வசியம் தனது வசீகரத்தன்மையில் , தான் சொன்னதை சொல்லி, செய்ததை செய்யும் தன்மையுள்ளவர்களாக மற்றவர்களை மாற்றுகிறது – மேலும் வசியம் செய்தவரின் எண்ணத்தை மீறி வசியம் செய்யப்பட்டவர் எதுவுமே செய்ய முடியாமல் போகின்றது.

2. மோகனம் என்றால், மயக்குவது . தன்னிடம் மயங்கச் செய்வது , தான் சொல்வதை மற்றவர்களை கேட்க செய்வது.

3. உச்சாடனம் என்றால், தனது மந்த்ர சக்தியால் தன்னுடைய நோய் , கடன் , பேய், பிசாசு , பூதம் , எதிரிகள் போன்ற தீய சக்திகளை மிரட்டி தன்னிடம் நெருங்க விடாமல் துரத்துவதாகும் .

4. ஸ்தம்பனம் என்றால், ஒன்றைக் கட்டுப்படுத்தி நிற்கச் செய்து இதில் பாய்ந்து வரும் அம்பைக்கூட அப்படியே நிறுத்தலாம் என்கிறார். காற்றை , நீரை , ஸ்தம்பிக்க செய்து அதன் மீது அமரலாம் , நீர்த்தன்மை உடைய பொருட்களை கட்டியாக கூட உறையச் செய்யலாமாம். 

5. ஆகர்ஷனம் என்றால், தன்னை நோக்கி இழுத்துக் கொள்ளுதல். மனிதர்கள் , மிருகங்கள், பொருட்கள் போன்ற எல்லாவற்றையும் தன்பால் இழுக்கலாம். ஒருவர் சாதகனுக்கு எதிராக பயன்படுத்த நினைக்கும் எந்தவிதமான பொருள்களையும் , அவரிடம் அகப்படாமல் தன்னை நோக்கி வரச் செய்து தன்னை காத்துக்கொள்ளலாம்.  

6. வித்துவேடனம் என்றால், ஒருவரை ஒருவர் வெறுக்கச் செய்வது , பகைமை உண்டாக்குவது , எது தனக்கு வேண்டாததோ அதனை , தன்னை விட்டு விலகி ஓடச் செய்வது. ( தன்னிடமுள்ள தீய எண்ணங்கள் , தீய பழக்கங்கள் போன்றவை )

7. பேதனம் என்றால், வேறுபடுத்துவது , பிரிப்பது . (நண்பர்கள் , கணவன் மனைவி , தாய் குழந்தையைப் பிரிப்பது போன்ற பாதகமான செயல்கள் நம்மை இம்மையிலும் , மறுமையிலும் தீராத பாபம் தரும்.) நம்முடைய அறியாமை, நோய், மற்றவர்களுக்கு உள்ள நோய் முதலியவைகளை வேறுபடுத்தவும், ஊரை மிரட்டும் கொள்ளையர்கள் போன்ற கூட்டத்தினரை பிரிக்கவும் பயன்படுத்தலாம்.

8. மாரணம் என்றால், அழிப்பது, கொல்வது . மனிதர்கள் , தனக்குள்ளும் , வெளியிலும் இருக்கும் தீய சக்திகளை அழிப்பதற்காகவே ஏற்ப்பட்டது .

அஷ்டகர்மாக்களை ஒருவர் தனக்காகவும் , பிறருக்காகவும் செய்வதால் இவைகள் கர்மா அதாவது தொழில் எனப்படுகிறது.

இவைகளால் யாருக்கு என்ன லாபம் ? என்று கேட்போர் உண்டு .

இதில் லாபம் இல்லாமல் இல்லை . ஆனால் இந்த லாபம் என்பது பணம் தரும் லாபமல்ல , மன அமைதி , மன விகாரம் நீக்கல், ஆழ் மன நிம்மதி போன்ற உண்மை நிலை உணர்தல் தொடர்பான லாபங்கள்.

எத்தனை கோடிகள் கொடுத்தாலும் கிடைக்க முடியாத உன்னத நிலை .

யோசித்துப் பாருங்கள்.

வெற்று உடம்பாக , கையில் சல்லிக் காசின்றி , ஒரு அனாதையைபோல் பிறந்த மனிதன்,

ஒருநாள் ஒரு உடை என்று அணிந்து கொண்டே வந்தால் முதலில் அணிந்த உடையை மீண்டும் அணிய மூன்றாண்டாகும் என்ற நிலை கண்ட போதும்  ,

சல்லிகாசின்றி பூமிக்கு வந்த மனிதன் தனது கொள்ளுப் பேரனின் கொள்ளுப்பேரன் வரைக்கும் காசு ,பணம் ,சொத்து சேர்த்த நிலை கண்டபோதும் ,

தன்னந் தனியாளாக பிறந்தவன் மகா பெரிய குடும்பஸ்தனாக மாறி வாழ்வில் பல விதத்திலும் செல்வாக்கு , சொல்வாக்கு , ஆள் அம்பு சேனை  என பெரு வாழ்வு  கண்டபோதும் –

–          சுத்தமாக நிம்மதியை தொலைத்தவனாக , அமைதியை ஆழக்குழியில் தானே புதைத்தவனாக , மாபெரும் குடும்பத்தில் சுற்றங்கள் புடைசூழ தான் நின்ற போதும் தனி ஆளாக , தனி மரமாக , தனிமைபடுத்தப்பட்டு நிற்பது போன்ற  மன நிலைப்பாடு கொண்டவர்களை எங்கும் பார்க்கும் நிலை இன்று வந்து விட்டது .

யாரைப் பார்த்தாலும் அவர்களுக்கு ஒன்று  அல்லது பலவான மனக்குறைகளும் நிவர்த்தி செய்யமுடியுமா , முடியாதா என்ற பயத்தோடும் கூடிய வாழ்வினை தன்னகத்தே கொண்டே உலா வருகின்றார்கள்.

என்னவென்றே குறிப்பிட முடியாத இறுக்கமான முகத்தோடு வாழவேண்டுமே என்கிற காரணத்திற்காகவெ வாழ்பவர்கள் போல இன்றைய தலைமுறையினர் வாழ்கின்றனரே இது என்ன அவலமான நிலை ?

வாழ்வென்பது ஆனந்த மயமானதல்லவா ! அழுது வடிவதல்லவே !!

கிடைததற்கறிய மனிதப் பிறவியப்பா இது என்று சொன்னால் “ அய்யா என் நிலைமை உங்களுக்கில்ல, அதனால சொல்றீங்க “ என்று வாழ்வை ஏதோ ஒரு வழியில் தொலைத்தவர்கள் புலம்புவதை தினமும் காண்கிறோம்.  

இதே வாழ்வை நமது மூதாதையர் வாழ்ந்த போது இப்படி இருந்ததில்லையே – ஏன் நமது தந்தையே நம்மைப் போல இப்படி மந்திரித்த ஆடு போல இருக்கவில்லையே!

நாம் மட்டும் ஏன் இப்படி ஆனோம் ?

ஏதோ மந்திரத்தில் கட்டுண்டவர்களாகவே இன்றைய மனிதர்களின் அன்றாட வாழ்வு இயந்திரத்தனமாக அமைந்துள்ளதை எல்லோரும் உணர்கிறோம் .

அதற்கு இன்று முகநூலிலும் , தனித்தனி பிளாக்கிலும் வெளியாகும் மனக் குமுறல்களும், ஒன்றுமில்லாத மிக சாதாரண விஷயத்திற்கு ஏகப்பட்ட Likes வருவதும்  சாட்சியாகும்.

உதாரணமாக : ஒரு கடிதமும் அதற்கு like ம் பாருங்கள்

Working on two important works. So for the next 4,5 days i would’nt be in touch with you all. Sorry.    Shall come back very soon. Bye for now. Will miss u all.

Like ·  · Share · 21 hours ago · 

ஒரு நான்கு ஐந்து நாள் நான் வரமாட்டேன் என்கிற சாதாரண கடிதத்திற்கு 103 like .,

இப்படித்தான் போகின்றது Face Book

மேலும் பல புத்தகங்களில் உள்ளதை அப்படியே முகநூலில் காப்பி செய்து விடுவதும் நடக்கின்றது .

எதை எதையோ படித்து தனக்கே எல்லாமும் தெரியும் என்கிற மனோபாவமும் இன்று மலையென வளர்ந்துள்ளதும் காரணமாகும்.

ஒருமனிதன் , தனது வாழ்வின் அல்லது பொதுவாக மனித வாழ்வின் உண்மையான  அதிசூட்சுமத்தினை உணர்ந்திருந்தால் மனம் வேண்டாத கவலையை தன்னுள் வைத்திருக்காது.

யோகம் பயின்று இங்கே மறைந்து எங்கோ எழுவது போன்ற சித்து விளையாட்டு எல்லாம் வேண்டாம் , ஆனால் மன நிம்மதியை , வாழ்வின் உண்மையை ஒவ்வொருவரும் புரிந்து கொண்டாலே போதும் ,

அதற்கான சரியான வழி யோகம் பயில்வதுதான்.

ஒரு வீட்டில் ஒருவர் அல்லது இருவர் யோகம் தெரிந்திருந்தால் கூட அந்த வீட்டில் கண்டிப்பாக அமைதியும் , ஆனந்தமும் நியாயமான முறையில் கிடைத்துவிடும் .

நியாயமற்ற வழியில் வரும் ஆனந்தமும் மகிழ்ச்சியும் நிலைப்பதில்லை , நியாயமற்ற முறையில் வருகின்ற பணமும் , வைத்திய செலவுக்குத் தான் போகும் .

எந்த விதத்தில் பணம் போனாலும் அது ஏதாவது ஒரு வழியில் திரும்ப கிடைக்கும் , ஆனால் வைத்தியசெலவு செய்த பணம் எந்நாளும் திரும்பாது அல்லவா?

எல்லோரும் யோகம் பயிலத் துவங்கினால் வாழ்வில் நாம் யாருக்கும் தீங்கிழைக்க மாட்டோம் , நமக்கும் யாரும் தீங்கெண்ணமாட்டார்கள்.

சரியாக விதியை நாமே வகுத்து வாழலாம் . நமது சந்ததியினர் நலமும் வளமும் நிரந்தரமாக பெறுவார்கள் , செழிப்படைவார்கள் .

அஷ்டகர்மாக்களில் ஏதேனும் ஒன்றை கை வரப் பெற்றாலே போதும். நமது வாழ்வின் நிலை மிக அருமையாக அமைந்து விடும்.

ஒருவரின் பிறந்த ஜாதகத்தை துல்லியமாக ஆய்வதன் மூலம் அவருக்கு இப்பிறப்பில் அஷ்ட கர்மாக்கள் கைகூடி வருமா, வரும் அஷ்ட கர்மாக்களால் அவருக்கு நன்மைகள் உண்டாகுமா , உண்டாகாதா எனவும் அறியலாம்.

இவைகள் எல்லாம் உலக மக்களின் நன்மைக்காகவே உருவாக்கி அருளப்பட்டவை யாகும், மதங்களுக்கப்பாற்பட்டதாகும் , எல்லா மதங்களும் மனிதன் தனக்காக  தோற்றுவித்தவைதான். தானே எந்த மதமும் தோன்றியதில்லை , நாம் தோற்றுவித்த ஒரு மதத்திற்கு நாமே அடிமையாகும் நிலையை நாம் யோசிப்பதே இல்லையே?ஏன் ?

பரந்து இருக்கும் இந்த உலகின் ஒவ்வொரு மனிதனுக்கும் வேதம் என்பது முழு உரிமையானதாகும் . இந்த வேதம் , யோகம் , த்யானம் , தவம் , மந்த்ரங்கள் எவற்றிற்கும் தனியான ஒரு மதம் உரிமை கொண்டாட முடியாததாகும் . அது எந்த மதமாக இருந்தாலும் சரியே.

வேதம் என்பதே உலக பொது மறையாகும் உலக பொதுமறை என்றால் உலகமக்கள் அனைவருக்கும் உரிமையானது என்று பொருள்.

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்போம் , ஆனால் சிவபெருமானையே இந்து கடவுளாகத்தான் பார்க்கின்றோம். எந்நாட்டவர்க்கும் இறைவன் இந்துக்களாகிய நமக்கு மட்டும் உரிமையானவராக  எப்படி ஆக முடியும் ?

நாம் மனிதர்கள் அவ்வளவுதான் . அதற்கு மேல் மதம் , ஜாதி என்பதெல்லாம் ஒரு மாயப் போர்வை , இதனை உணர்ந்தாலே போதும் .

நான் ஒன்றை உண்டு சொல்வதால் ஒன்று உண்டு என்றோ – நான் ஒன்றை இல்லையென்றால் அந்த ஒன்று இல்லாமல் போவதோ இல்லை , யார் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் உண்டென்பது என்றும் உண்டு.

உதாரணமாக ஒரு வஸ்து (பொருள்) இருக்கின்றது என்றால் அதனை உருவாக்கியவர் ஒருவர் உண்டு தானே , அவர் எனது கண்களுக்கு எதிரே தெரியவில்லை என்பதனால் அதனை உருவாக்கியவர் இல்லை என்றாகி விடுமா ?

ஒவ்வொன்றையும் உருவாக்கியரை பார்த்தால்தான் ஒப்புக்கொள்வேன் என்பது எந்த விதமான ஞானம் ?

மனிதன் உருவாக்கிடும் பொருள்களுக்கு முடிவு தேதி (Expiri Date) உண்டு அல்லவா , அதுபோலவே இறைவன் அல்லது (இயற்கை) உருவாக்கிய பொருட்களுக்கும், முடிவு தேதி உண்டு , ஆனால் எப்போது முடிவு என்பது தெரியாது ( ரகசியம் ஒன்றுமில்லை தெரிந்தால் அதற்கு முன்னரே மனிதனுக்கு முடிவு வந்துவிடும் )

அப்படி உருவாக்கிய அந்த சிருஷ்டி கர்த்தாவை நான் சிவன் என்கிறேன் , மற்றவர்கள் வேறு பெயரில் அழைக்கிறார்கள் அவ்வளவுதான் .

நான் சிவன் என்றழைக்க தெரிந்து கொண்டதுபோல் , அவர்கள் வேறு பெயரில் அழைக்க தெரிந்திருக்கின்றார்கள் . உருவாக்கியவரை எண்ணிக் கொண்டு எப்படி அழைத்தாலும் அது அந்த உருவாக்கியவரை போய்ச் சேரும் என்பதுதானே உண்மை.

நமது குழந்தைக்கு நாம் ஒரு பெயர் வைத்திருப்போம் , ஆனால் நமது நண்பர் மனதில் யாரோ ஏற்படுத்திய அன்பு அலைகளின் காரணத்தினால் அவர், அவரது நண்பரின் பெயரை நமது குழந்தைக்கு சூட்டி அழைப்பார் , அதில் அவருக்கு திருப்தி, சந்தோஷம்.

அவர் அப்படி அழைப்பதால் நமது குழந்தையின் பெயர் மாறிவிடுமா என்ன ?

உலக மக்கள் அனைவருக்கும் ஒருவரே காரணமும் , கதியும் ஆனவர்.

அந்த ஒருவர் யாராக இருந்ருந்தால் என்ன ? நமக்கு தேவை, நாம் நம்மை சரணடைய செய்ய திருவடிகள் வேண்டும் , அதற்கு எந்த திருநாமம் இருந்தால் என்ன ?

யாரோ ஏதோ சொன்னால் சொல்லட்டுமே ! அவர்கள் உண்மையை உணரும் போது அவர்களுக்கே தெரியும், என்பதே சரியான பதில் .

ஆனால் இதே பதிலை மற்றவர்கள் நம்மைப் பார்த்து சொன்னால் நமக்கு கோபம் வருகிறது. ஏன் ?

அதற்காக நாம் ஏன் கோபம் வருத்தம் கொள்ள வேண்டும் ? நாம் இதனை நம்புகிறோம் அவர்கள் அதனை நம்புகின்றார்கள் , நாம் எந்த அளவுக்கு இதனை முழுமனதாக நம்புகிறோமோ , அப்படித்தான் மற்றவர்களும் அதனை நம்புகிறார்கள் அவ்வளவுதான்.

இந்த நியாயமான , உண்மையான , சத்யமான , வாழ்வின் பேருண்மையை தெளிவாக உணர மனிதர்கள் யோகம் பயில்வது அவசிய தேவையாகின்றது – யோகப்பயிற்சி  நம்மை சேதப்படுத்தாமல் நம்முள் ஒளி ஏற்றும் , அற்புத உயர்நிலையை நம்முள் ஏற்படுத்தி நமக்கு என்றும் துணை நிற்கும் .

யோகம் பயில்வோம் , யோகமாக வாழ்வோம் .

வாழுங்கள் வளமோடு , வாழும் நாளெல்லாம்.

அன்புடன் கருணாகரன் .    

இந்த அஷ்ட கர்மாவுக்கும் உரிய மூலிகைகள் என்னவென்று அகஸ்தியர் கூறுவதை அடுத்த பதிவினில் பார்ப்போம்.

மந்த்ரமும் மாந்த்ரீகமும் தொடர்ச்சி . . 2

அன்பு நண்பர்களே வணக்கம்.

மூலிகையும் மந்த்ரமும் என்னவென்று அறியும் முன் நாம் யோகம் பற்றிய விஷயங்களை தெரிந்து கொள்வது அவசியமாகின்றது ,

ஆகவே இந்த பதிவினில் யோகம் பற்றிய முக்யமான தகவல்களை தெரிந்து கொள்வோம் .

யோகமும் , மூலிகையும் , மந்த்ரமும் என்னவென்று பார்ப்போம் .

முதலில் யோகம் . . .

மனித வாழ்வினில் கொஞ்சமும் எதிர்பாராத வகையில் நன்மைகள் பெருகி வருவதை நாம் யோகம் என்கிறோம் , காரணம் , நமது எண்ணங்களுக்கும் , செயல்பாட்டிற்கும் மேல் அதிகமாக நன்மைகள் கிடைப்பதால் அதனை நாம் யோகம் என்று சிறப்பித்து கூறுகிறோம்.

ஆனால் இப்போது நாம் சொல்ல இருக்கும் இந்த யோகம் என்பது , மண்ணில் மண்ணாக மறையப்போகும் இந்த மனித உடல், ஒரு பெரிய சாதனையை செய்து , இந்த மண்ணுலகில் வாழ்ந்து கொண்டுள்ள , வாழ்வதற்கு வர இருக்கின்ற, மனித உயிர்கள் தன்நிலையில் இருந்து உய்யும் பொருட்டு மகரிஷிகளாலும் , யோகிகளாலும் , சித்தர் பெருமக்களாலும் நமக்கு அருளப்பட்டதாகும் .

இந்த யோகம் எதிர்பாராமல் வருவதல்ல , எதிர்பாராமல் வரும் யோகமானது , நமது வாழ்நாளில் வரலாம் , வராமலும் போகலாம்.

ஆனால் இந்த யோகத்தினை பயிற்சியின் வாயிலாக நமக்கு நாமே பெற்றுக் கொள்ளலாம். அதுதான் இந்த யோகத்தின் தனித்தன்மையும் பெருமையுமாகும்.

இதனால் வருகின்ற யோகமானது , எப்பிறப்பிலும் நமது துணையாவதாகும்.

இந்த பயிற்சியினை வாசி யோகம் என்றும், ப்ராணாயாமம் என்றும் , மூச்சு பயிற்சி என்றும் கூறுவார்கள் . ஆனால் மனிதனை தெய்வ நிலை காணச் செய்வதால் இந்த பயிற்சியினை தெய்வநிலை யோகப் பயிற்சி என்பதே சரியாகும்.

இந்த யோகத்திற்கான பயிற்சிக்கு நேரம் காலமும் , உணவு முறையும் மிகவும் முக்யமானதாகும் .

இந்த யோகப்பயிற்சியை முறைப்படுத்தி பூலோக வாசிகளுக்கு அருட்கொடையாக அருளியவர்களுள் முதன்மையானவர் ஸ்ரீ ஸ்ரீ திருமூலர் ஆவார்கள்.

சாட்சாத் எம்பெருமான் ஆனவர் ஸ்ரீ ஸ்ரீ பார்வதி தேவிக்கு யோகத்தின் அதி சூட்சுமத்தை மனமுவந்து அருளி , தேவியானவர் அதனை பதஞ்சலிக்கும் , வியாக்ரபாதருக்கு அருள்பாலித்து , அதன்பின்னர் அவர்கள் இதற்கு வடிவம் தந்து , பின் அவர்களிடமிருந்து பணிந்து இதனைப் பெற்ற ஸ்ரீ ஸ்ரீ திருமூலர் இதற்கு உரிய பாடல்களையும் , பயிற்சியையும் வகுத்து மனிதர்களின் மேன்மை கருதி உலகறிய அருள் செய்தார்கள் .

பின்னாளில் வந்த பெருமைக்குரிய யோகிகளும் , சித்தர்களும் மனித ஜீவர்கள் பால் பேரன்பு கொண்டு தந்த , சிறப்பு மிக்க அந்த பயிற்சி முறையை எல்லோரும் முறையாக மேற்கொண்டால் வாழ்வில் எல்லா நலமும் , வளமும் அமைதியும், ஆனந்தமும் பெறலாம் .       

யோகப் பயிற்சிக்கு உரிய நேரம் என்னவென்று பார்ப்போம்.

24 நிமிடங்கள் என்பது ஒரு நாழிகை ஆகின்றது ,

2 ½ நாழிகை என்பது 1 மணி நேரம் .

நாளொன்றுக்கு 10 ஜாமம் .

5 ஜாமம் என்பது 12 மணி நேரமாகும் .

10 ஜாமம் என்பது 24 மணி நேரமாகும்

 

அப்படி என்றால் 24 மணியை ஜாமங்களாக பிரிக்கையில் 2 மணி 24 நிமிடங்கள் என்பது ஒரு ஜாமம் என்றாகின்றது.

முப்பது நாழிகைகளை 6 + 6 ஆக பிரித்தால் 5 ஆக பிரிக்கலாம்

பகற் காலம் முப்பது நாழிகை என்பது 5 ஜாமம் எனப்படும.

இராக் காலம் முப்பது நாழிகை என்பது 5 ஜாமம் எனப்படும.

இதில் பகல் முப்பது நாழிகையில், பூமியை ……..

6 நாழிகை கொண்ட முதல் ஜாமத்தை     (6.00-8.24)    ஆகாயமும்

6 நாழிகை கொண்ட இரண்டாம் ஜாமத்தை (8.24-10.48)    காற்றும்

6 நாழிகை கொண்ட மூன்றாம் ஜாமத்தை  (10.48-1.12)    நெருப்பும்

6 நாழிகை கொண்ட நான்காம் ஜாமத்தை  (1.12-3.36)     நீரும்

6 நாழிகை கொண்ட ஐந்தாம் ஜாமத்தை   (3.36-6.00)          நிலமும் ஆளுகின்றன.

இதில் இரவு  முப்பது நாழிகையில், பூமியை……..

6 நாழிகை கொண்ட முதல் ஜாமத்தை    (6.00-8.24)     நிலமும்  

6 நாழிகை கொண்ட இரண்டாம் ஜாமத்தை (8.24-10.48)    நீரும்

6 நாழிகை கொண்ட மூன்றாம் ஜாமத்தை  (10.48-1.12)    நெருப்பும்

6 நாழிகை கொண்ட நான்காம் ஜாமத்தை   (1.12-3.36)         காற்றும்

6 நாழிகை கொண்ட ஐந்தாம் ஜாமத்தை    (3.36-6.00)    ஆகாயமும் ஆளுகின்றன.

 

இதில் கதிரவன் உதயத்திற்கு முன் 6 நாழிகையும்

(*சுமாராக காலை 3-30 மணி முதல் 6.00 மணி வரையிலும்)

பின் 6 நாழிகையும் (*சுமாராக காலை 6-00 மணி முதல் 8.24 மணி வரையிலும்)

உள்ள காலமே யோகப் பயிற்சிக்கு உகந்ததாக ஸ்ரீ ஸ்ரீ திருமூலர் அருளுகின்றார்.

*(தினசரி சூரிய உதயம் கணித்து இந்த நேரத்தை முறையாக தேர்ந்தெடுக்கலாம்.)

 

திருமூலர் 3 ம் தந்திரம் , 16 வார சரத்தில்,

திங்கள் , புதன் , வெள்ளியில் மூச்சை இடைநாடி வழியாகவும் ,

செவ்வாய் , சனி , ஞாயிறில் மூச்சை வலது நாடி வழியாகவும் ,

வளர்பிறை வியாழனில்  மூச்சு இடை நாடியிலும்,

தேய்பிறை வியாழனில் மூச்சு வலது நாடியிலும் பயில வேண்டும் என்கிறார்.

 

மேலும்,

காலையில் யோகம் பயில கபம் நீங்கும்,

நண்பகல் யோகம் பயில கொடிய வாத நோய்கள் தீரும்,

விடியற்காலையில் யோகம் பயில பித்த நோய்கள் அகலும் என்கிறார்.

 

காற்றினை உள்ளுக்கு இழுப்பது “ பூரகம் எனப்படுகிறது ,

காற்றினை வெளி விடல்  “ ரேசகம் “ எனப்படுகிறது,

காற்றினை உள் நிறுத்துதல் “ கும்பகம் “ எனப்படுகிறது.

 

  • 16 மாத்திரை அளவு இடைகலையில் மூச்சினை (பூரகித்து) உள்ளிழுத்து
  • 64 மாத்திரை அளவு இழுத்த காற்றினை (கும்பித்து) உள்நிறுத்தி
  • 32 மாத்திரை அளவு பிங்கலையில்(வலது கலையில்) மெல்ல (ரேசித்து) வெளியிட்டு பயிலுதல் பிராணாயாமம் எனப்படுகின்றது

இந்த முறைக்கு மாறாக வலப்பக்கம் காற்றினை உள்வாங்கி பயிலுதல் “வஞ்சனை” எனப்படும்.

இடைகலை வழியாக 16 மாத்திரை கால அளவு பூரகம் செய்து ,

பிங்கலையில் 32 மாத்திரை கால அளவு இரேசகம் செய்து மீண்டும்

காற்றினை உள்வாங்காமல் 64 மாத்திரை கால அளவு வெளி கும்பகம் செய்ய பல உண்மைகள் தெரியுமாம்.

மாத்திரை கால அளவு என்பது கண் இமைப்போது அல்லது கைந் நொடிப்பொழுது எனப்படுகிறது .

இந்த முறைகள் நன்கு தேர்ந்தவர்களாலேயே செய்யமுடியும்.

மேலும் இவைகளை எல்லாம் தேர்ந்த குருமூலமாகவே பயில வேண்டும்.

ஆரம்ப நிலையில் பயில்பவர்கள் , இதனை 

  • 6 மாத்திரை அளவு இடைகலையில் மூச்சினை (பூரகித்து) உள்ளிழுத்து
  • 24 மாத்திரை அளவு இழுத்த காற்றினை (கும்பித்து) உள்நிறுத்தி
  • 12 மாத்திரை அளவு பிங்கலையில்(வலது கலையில்) மெல்ல (ரேசித்து) வெளியிட்டு பயிலுதல் சாத்தியமாகின்றது என்றறிகிறோம் .

எப்படி என்றாலும் நன்றாக தேர்ந்த குருவின் துணை அவசியமாகின்றது . குருவின் துணையின்றி முயற்சிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

இடது நாசியை எப்படி மூடி வலது நாசியில் மூச்சு விடுவது என்பதையும் , கும்பகம் என்பதனை எப்படி செய்வது என்பதையும் , வலது நாசியை எப்படி மூடி இடது நாசியில் மூச்சு விடுவது என்பதையும் , வெளி கும்பகம் எவ்வாறு செய்வது என்பதனையும் குருவின் அருகாமையில்தான் செய்ய வேண்டும் .

ஏனென்றால் குருவின் துணையின்றி இந்த பயிற்சியில் ஈடுபட்டு தோல்வி காண்பது மட்டுமல்ல , உடல் தொந்திரவுகளும் ஏற்படுவதுண்டு . ( தொந்தி , அடிக்கடி ஏப்பம் , அடிக்கடி அபானன் பிரிதல், சித்த சுவாதீனம் , பார்வை குறைபாடு போன்றவைகள் )

முறையாக பயிற்சியை பயின்றால் இதனுடைய பலன்கள் சொல்லில் அடங்காதது.

காரணம் , மனித முயற்சியினால் செய்ய முடியாத பலவிதமான சாதனைகளையும், சாகசங்களையும் நேர்த்தியாக செய்து முடிக்கலாம் ,

ஆனால் பயில்வோரின் மனதில் முழுக்க முழுக்க தன்னலம் கருதாமையும் , மக்கள் நலனும் , உலக நன்மையை கருதும் மனோபாவமும் இருப்பது அவசியமாகும் .

அடுத்து வருவது உணவு முறைகள் :

மேலே சொல்லப்பட்ட பயிற்சிகள் செவ்வனே முடித்து பயிற்சியில் உயர்நிலை காண சைவ உணவு மிக அவசியமாகின்றது . அசைவ உணவுகள் உண்போர் பயிற்சிகளை தொடர்ந்து பயில்வதே முடியாமல் போகும் . மேலும் உடல் உபாதைகளும் உருவாகும் .

அதனால் இதனை பயில முயல்வோர் அசைவம் உண்பதை நிறுத்தி விடுவதே சிறந்ததாகும் . அப்போதுதான் சிறப்பாகவும் , விரைவாகவும் பயிற்சியில் உயர்நிலை காண முடியும்.

துவரம்பருப்பு சைவ உணவல்ல என்பது மூத்தோர் கூற்றாகும் , சைவம் என்பது பாசிப்பருப்பு குழம்பு , கீரைவகைகள் , தேங்காய் போன்றவை என்பர் .

இந்த பயிற்சி துவங்குவதற்கு ஏற்ற வயது குறைந்தது 18 வயதும், அதிகபட்சம் 45 வயது எனலாம் . இதற்கு மேல் வயது கொண்டவர்கள் வெறும் த்யானம் மட்டும் செய்யலாம்.

உடலும் , மனமும் , எண்ணமும் , செயலிலும் தூய்மையாக இருப்பது மிக அவசியம்.

இந்த பயிற்சியின் மூலமாக வெளிப்படுவதே அடுத்து வரும் அஷ்ட கர்மாக்களும் அதன் பலன்களும் .

அஷ்ட கர்மாக்களை என்னெவென்று அடுத்த பதிவினில் பார்ப்போம்.

முடிவெடுக்கும் முன்னே

 

அன்பு நண்பர்களே வணக்கம்.

ஒருகதை சொல்லப் போகின்றேன் கேளுங்கள் .

ஒரு நாட்டின் ராஜாவுக்கு ஒருநாள் சிந்தனை ஒன்று தோன்றியது , அதாவது தனது வாழ்வில் துன்பத்தினால் இறுதியை அடைந்த ஒருவனுக்கு , அவனை காப்பாற்றக் கூடிய ஒரு மந்திரம் எதுவாக இருக்கும் ? என்பதே அந்த சிந்தனை .

மன்னனும் எவ்வளவோ முயன்றும் அப்படி ஒரு மந்திரம் என்னவென்று தெரியவில்லை , உடனே நாட்டு மக்களுக்கு பறையறிவிக்க சொன்னான்

“ வாழ்வின் துன்பத்தில் சிக்கி இறுதி நாளில் இருக்கும் ஒருவனை காப்பற்றக் கூடிய மந்திரத்தினை சொல்பவருக்கு தனது நாட்டில் ஒருபகுதியை தருவதாக அறிவித்தான் .

நிறைய பேர் தினமும் வரத் துவங்கினார்கள் .

ஒவ்வொருவர் ஒவ்வொரு மந்திரங்களை சொன்னார்கள் .

நமசிவாய என்றார் ஒருவர் .

ஓம் சக்தி என்றார் மற்றவர் .

உன்னையே நம்பு என்றார் இன்னொருவர்.

ஆனால் மன்னன் திருப்தியாகவில்லை .

எல்லோர் சொன்னதையும் ஏதோ ஒரு காரணம் சொல்லி மறுத்தான் , அவர்களின் பதிலில் அவன் மனம் ஏனோ சமாதானமாகவில்லை .

இந்நிலையில் ஒருநாள் மன்னனைக் காண ஒருவன் வந்தான் .

அவன் மன்னனிடம் ஒரு மோதிரம் தந்து “ மன்னா , நீங்கள் எந்த குறையுமின்றி நீடுழி வாழ வேண்டும் , ஒருக்கால் நீங்கள் சொன்னதுபோல ஒரு நிலை உங்களுக்கு வருமானால் அன்றைய தினம் இந்த மோதிரத்தை திறந்து பாருங்கள் , அதுவரை இதனை பார்க்கவேண்டாம், பின்னொருநாளில் தங்களை சந்திக்கின்றேன் என்று சொல்லி மோதிரத்தை மிகவும் பவ்யமாக மன்னனிடம் தந்து விட்டு சென்றான்.

மன்னனுக்கு அந்த மனிதனின் சொல்லும் செயலும் ஒருவிதமான நம்பிக்கையும் , எதிர்பார்ப்பையும் , மன அமைதியையும் தந்தது .

இந்த சம்பவத்திற்கு பின் மன்னன் இதனை மறந்தே போனான் .

சில வருடங்களுக்குப்பின் . . .

திடீர் என இந்த மன்னனுக்கும் வேறு நாட்டு மன்னனுக்கும் போர் மூண்டது.  

தயார் நிலையில் இல்லாததால் இந்த மன்னன் தோற்றுப் போனான் .

நாடு , மனைவி , மக்களை இழந்த மன்னன் மிகவும் மனம் தளர்ந்து வாழ்வினை முடித்துக்கொள்ள எண்ணினான் . தப்பித்து உயிர் பிழைத்த தன்நிலையை எண்ணி எண்ணி மனம் சஞ்சலமான மன்னன் , தூரத்தில் ஒரு மலையினை கண்டான் .

இந்த மலையில் இருந்து விழுந்து தற்கொலை செய்துகொள்ள தீர்மானித்த அந்த மன்னன் மலையின் மீதேறினான் .

தட்டுத்தடுமாறி மலையின் உச்சியை அடைந்த மன்னன் , இறைவா, என்னை ஏற்றுக்கொள் என்று வானத்தை நோக்கி இரு கைகளையும் உயர்த்தி விண்ணைப் பார்த்து உரக்க கூவினான் .

அப்போது அவன் கையில் இருந்த மோதிரம் சூரிய ஒளியில் மின்னியதை   கண்டான்.

உடனே , அவன் மனதில் அந்த மனிதன் சொல்லிய வார்த்தைகள் ஒலித்தன.

“ மன்னா , நீங்கள் எந்த குறையுமின்றி நீடுழி வாழ வேண்டும் , ஒருக்கால் நீங்கள் சொன்னதுபோல ஒரு நிலை உங்களுக்கு வருமானால் அன்றைய தினம் இந்த மோதிரத்தை திறந்து பாருங்கள் , அதுவரை இதனை பார்க்க வேண்டாம்

இப்போது அதுபோன்ற நிலைதானே அதில் என்னதான் உள்ளது பார்ப்போம் , என்று தற்காலிகமாக கீழே விழுந்து மரணிக்கும் எண்ணத்தை கைவிட்டு விட்டு அமர்ந்து அந்த மோதிரத்தை திருப்பி உள்ளே என்ன இருக்கின்றது என பார்த்தான்.

மோதிரத்தின் உள்ளே சிறிய காகிதம் ஒன்று சுருட்டி வைக்கப்பட்டிருந்தது , அதனை மிகவும் ஜாக்கிரத்கையாக எடுத்து பார்த்தான் , ஒரே ஒரு வாசகம்  ஒரே ஒரு வரியில் எழுதப்பட்டிருந்தது . அந்த வாசகம் இதுதான் . . . .

இந்த நிலை மாறும்

அவ்வளவுதான்

வேறொன்றும் இல்லை , முன்னும் பின்னும் திருப்பிப் பார்த்த மன்னன் ஏதும் காணாததால் அந்த வாசகத்தினை பற்றி யோசித்தான் .

தான் தற்போது உள்ள நிலை மாறும் , இதற்காக தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு வந்து விட்டோமே என்றெண்ணி மனதினை தைரியப்படுத்திக் கொண்டு மன்னன் மலையிலிருந்து கீழிறங்கினான்.

தனது ஆதரவாளர்களைக் தேடிக் கண்டு பிடித்தான் , கிராமங்களில் வாழும் மக்கள் தங்களது மன்னனைக் கண்டதும் மகிழ்ந்து கொண்டாடினார்கள் . இளைஞர்களை ஒன்று திரட்டி படைகளை உருவாக்கினான்.

அரண்மனையில் இருந்த அவனது பழைய படைவீரர்களின் ரகசிய ஒத்துழைப்போடு, எதிர்பாராமல் திடீரென்று அரண்மனையின் ரகசிய வாசல் வழியாக உள்நுழைந்து எதிரி நாட்டு மன்னனை அதிரடியாக கைது செய்து சிறையிலடைத்து மீண்டும் மன்னனான்.

மீண்டும் மன்னன் ஆட்சியிலமர்ந்ததும் மக்கள் மிகவும் ஆனந்தவசமானார்கள்.

இந்நாளை விமரிசையாகக் கொண்டாட எண்ணிய மன்னன் , இந்த வாய்ப்பினை ஏற்படுத்தித் தந்த மோதிரம் கொடுத்த மனிதனை பறையறிவித்து வரவழைத்தான் .

நாடு முழுக்க ஒரே கொண்டாட்டமாக இருந்தது , அரண்மனையில் மக்கள் கூட்டம் , அரியணையில் மன்னன் , அருகில் மகாராணி , மன்னனின் குழந்தைகள் , மந்திரி , பிரதானிகள், ஆடல் பாடல் என்று எங்கும் சந்தோஷ வெள்ளம் அலை பாய்ந்து கொண்டிருந்தது .

மோதிரம் கொடுத்த மனிதன் வந்தான் , மன்னனை தாழ்ந்து பணிந்தான். மன்னன் அரியணையில் இருந்து இறங்கி வந்து வரவேற்றான்.

தான் அறிவித்திருந்தபடி பாதி நாட்டினை நீங்கள் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றான் மன்னன்.

மன்னா, நாட்டினை ஆளும் தகுதி கொண்டவர் தாங்கள்தான் , எனக்கு ஏதும் வேண்டாம் என்று பணிவோடு சொன்னான் அந்த மனிதன் .

மன்னன் எவ்வளவோ மன்றாடியும் எதனையும் ஏற்க மறுத்தான் அந்த மனிதன் .

இறுதியாக மன்னன் சொன்னான் , அன்பரே , நீங்கள் ஏதேனும் என்னிடம் இருந்து பெற விரும்பினால் தயங்காமல் கேளுங்கள் .

அந்த மனிதன், மன்னா , “வாழ்வின் மிக அதிக சந்தோஷத்தின் உச்சாணியில் தாங்கள் தற்போது அமர்ந்துள்ளீர்கள் என்பது உண்மைதானே “

மன்னன் : “ஆமாம் அது உண்மைதான் அன்பரே

அப்படியானால் அந்த மோதிரத்தினை இப்போது எடுத்துப் பாருங்கள் என்றான் அந்த மனிதன் .

ஏன் என மன்னன் வினவ , எடுத்துப் பாருங்களேன் என்றான் அந்த மனிதன்.

சரி என சொல்லிய மன்னன் , தனது விரலில் இருந்த , மோதிரத்தினை எடுத்து உள்ளிருக்கும் அந்த சிறிய காகிதத்தை பிரித்துப் பார்த்தான்.

அதில் அந்த மந்திர வாசகம் தெரிந்தது .

இந்த நிலை மாறும்

இதுதான் மன்னா வாழ்க்கை , இந்த நிலை மாறும், எனவே எதிலும் கவனமாகவும்  சந்தோஷமாகவும் இருங்கள் , நான் வருகின்றேன் என்று அவையோரை பணிந்து மன்னனிடமிருந்து விடை பெற்றான் அந்த மனிதன் .

நெஞ்சம் தழுதழுக்க அவன் செல்லும் திசையைப்பார்த்து வணங்கி நின்றான் மன்னன்.

இழந்த வாழ்வை மீட்டுத் தந்த மந்திரம் தந்தவனல்லவா இந்த மனிதன் !

 

அன்பின் நண்பர்களே , உங்கள் சம்பந்தமான எந்த முடிவினையும் எடுக்கும் உரிமை உங்களுக்கே உள்ளது . சந்தேகம் வேண்டாம் , இதில் வேறு கருத்தில்லை , உங்களின் எந்த முடிவினையும் தடுக்கும் எண்ணமும் எமக்கில்லை .

ஆனால் எந்த முடிவெடுக்கும் முன்னரும் இந்த மந்திர வாசகம் நினைவில் வரட்டும்.

இந்த நிலை மாறும்

 

வளமோடு வாழுங்கள் , வாழும் நாளெல்லாம் .

அன்புடன் கருணாகரன் .

 

 

கால்பங்கு விதியும் , முக்கால்பங்கு மதியும்.

அன்பு நண்பர்களே வணக்கம்.

கால்பங்கு விதியும் , முக்கால்பங்கு மதியும்.

இந்த தலைப்பு எந்தகாலமும் பூமியில் வாழும் மனிதர்களின் வாழ்வில் இன்றியமையாத, பொருட்செறிவான நடைமுறை செயல் காரண சொல்லாகும் .

விதியும் மதியும் எனபது நமது வாழ்வின் முக்யமான சொற்றொடர்கள் , இந்த வார்த்தைகளை  பயன்படுத்தாத மனிதர்களோ , ஞானிகளோ , சித்தர்களோ , ரிஷிகளோ , தேவர்களோ ஏன் தெய்வங்களோ கூட இல்லை என்றே கூறலாம்.

அந்தஅளவிற்கு விதியும், மதியும் அனைவரின் வாழ்விலும் பங்கெடுக்கின்றது.

கண்ணுக்கு புலப்படாத விதியின் பேரில் சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளுக்கு அளவில்லை , யாரேனும் விதியினை பார்த்து கேட்க போகிறார்களா அல்லது விதிதான் நம்மை நேரில் பார்த்து கேட்குமா என்னும் அசட்டு தைரியம்தான் .

எல்லாம் என் கிரக அமைப்பு , கர்மா , விதி , தலையெழுத்து , தலை விதி என்பதெல்லாம் ஒரே அர்த்தத்தைத் தரக் கூடிய அல்லது ஒரே செயலின் வெவ்வேறு பெயர்கள் ஆகும்.

ஒருவன் அல்லது ஒருத்தி  இப்படித்தான் வாழ்வார்கள் , வாழவேண்டும்  என்பது தீர்மானிக்கப்பட்டு அதன்படி அவர்கள் வாழக்கூடிய அல்லது அவர்களை வாழ வைக்கக்கூடிய பெற்றோர் அமையப்பெற்ற குடும்பத்தில்  அவர்கள் பிறந்து, அவர்களுக்கு விதிக்கப்பட்ட முறைமையோடு வாழ்வார்கள் என்பது ஜோதிட சாஸ்திர விதியாக உள்ளபோதும் ,

வல்லான் வகுத்த விதியினை மீறி எதுவும் நடக்க இயலாது , அதுவே தான் முடிவானது என்றபோதும்,

மனிதர்களுக்கு விதிக்கப்பட விதியினை மாற்றி எழுத, அதை எழுதிய பிரம்மனாலேயே முடியாது என்பது சத்யமான சொல் எனும்போதும் ,

முற்பிறப்பில் உயிரினங்கள் செய்த செய்கைகளின் விளைவே இப்பிறப்பின் உயர்வும் , தாழ்வும். ஆகவே அதனை ஒவ்வொரு உயிரினமும் அனுபவித்தே தீர வேண்டும் என்பது சரியான தீர்ப்பென்றபோதும் ,

ஒரு கர்ப்பவதியானவள் தான் கொண்ட கர்ப்பத்தினை தானேதான் பிரசவிக்க வேண்டும் ,. அதனை எவ்வளவு நெருங்கிய உறவானபோதும் யாருக்கும் மாற்றித் தர இயலாது என்பது போல , தனது வாழ்வில் வரும் இன்ப துன்பங்களை மனிதர்கள் தானேதான் அனுபவிக்க வேண்டும் என்பதனை மனிதர்கள் எல்லோரும் நன்குணர்ந்த போதிலும் கூட ,       

அந்த விதி என்னவென்றே தெரியாமல், உலகில் வாழும் ஒருவன் அல்லது ஒருத்தி, தன்னுடைய எல்லாவகையான தோல்விகளுக்கு மட்டும் விதியின் பால் குறை சொல்வதை,

ஆமாம் விதிதான் காரணம் என்று ஏற்கமுடியுமா ?

இன்னதுதான் நமக்கு விதிக்கப்பட்டது என்று எந்த ஒரு மனிதரும் தெரிந்து கொள்ள முடியாது எனும் போது , விதியினை என்னவென்று அறியாதவரை , அது எப்படி விதியின் விதியாக இருக்க முடியும் ?

நமது அசாதாரண முயற்சிகள் தோல்வியை தழுவினால் , நாம் கடுமையான முயற்சியும் , அதனை செயலாக்க மிக அதிக உத்வேகமும் காட்டாமல் விதி சரியில்லை என கூறலாமா ?.

தான் செய்யும் தவறுகளுக்கும் , தப்புகளுக்கும் விதியின் சாயம் பூசப்படுவது தடுக்கப்படவேண்டும் அல்லவா !

பலமுறைகள் கடும் தோல்வியும் எதிர்ப்பும் கண்டவர்கள் பலரும் மகோன்னத வெற்றி கண்டுள்ளதை சரித்திரம் பாராட்டி பெருமைபடுகிறதே !!

முதல் முறையிலேயே வெற்றிக் கனியை சுவைத்தவர்கள் வெகு சிலரே !!

தெரியாத விதியை எண்ணி நமது முயற்சிகளை நாம் ஏன் நிறுத்திக்கொள்ள வேண்டும் ?

விதி மனிதர்களின் எந்தமுயற்சியையும் செய்யாதே என்று தடுப்பதில்லையே?

 

நமது முயற்சியில் அல்லது நமது செயலாக்கத்தில் நாம் முழுமையாக ஈடுபாடற்று இருப்பதும் ஒரு காரணமாகாதா ?

முயற்சி செய்யக் கூட முயற்சிக்காதது மனிதனின் முடியாமைதானே ?

இந்நிலையில் . . .

தனது முயற்சியை யாரோ தடுப்பதாக தானே நினைத்துக்கொண்டு அல்லது தனது முயற்சியை விதியே தடுத்து நிறுத்தி வைத்திருப்பதாக எண்ணிக் கொள்வது தவறல்லவா ?

உதாரணமாக :

தனக்கு நீண்ட ஆயுள் உண்டென்ற ஜோதிட நம்பிக்கை உள்ள ஒருமனிதன் ஓடுகின்ற கனரக வாகனத்தில் தலை வைப்பது எப்படி அபத்தமானதோ !

நேரம் தனக்கு மிக நன்றாக இருப்பதாக கருதும் மனிதன் , தொழிலேதும் செய்ய முயற்சிக்காமல் , “ நேரம் நல்லா இருக்கு “ என்று சொல்லிக் கொண்டு  வீட்டிலேயே முடங்கிக் கிடப்பது எப்படி நன்மையை தராதோ அது போல ,

இது போன்ற தவறான நம்பிக்கைகளால் (கொள்கைகளால்), நமது எண்ணங்களோ , செயல்களோ நிறைவேறாதபோது , நமது மனம் சங்கடப்பட்டு , இறை வழிபாட்டில் நம்பிக்கையுடன் , முழுமன ஈடுபாட்டுடன் செயல்படாமல் சலனப்பட்டு போகும்.

காரணம், மனிதர்களின் இயல்பான சுபாவமே ஒன்றை உயிரினும் மேலாக நேசித்தல் அதன் பயன் தனக்கு உபயோகமில்லாவிடில் அதனை உடனடியாக வெறுத்துவிடும் என்பதாகும்.

மேலும் இதனை ஒரு சாரார் மூட நம்பிக்கை எனும் போது நம்மால் மறுத்து பேச இயலாது போகும் .

அதனால்தான் எதனையும் விதியின் மேல் ஏற்றிவிட்டால் “நான் என்னசெய்வேன் என்னால் முடிந்தவரை போராடிப் பார்த்துவிட்டேன் எல்லாம் விதி” என்று நாம் சுகமாக இருக்கலாம் எனும் மனோபாவம் வளர்ந்து விட்டால், பின்னொருநாளில் இவ்வாறு மன மாற்றம் கண்டு மனிதர்கள் தன்னுடைய சுய தெய்வத்தன்மையை இழந்து விடக்கூடும் எனும் அச்சத்தினால் தான் இக்கட்டுரை பிறந்தது.

  1. விதி என்பது இதுதான் என்று யாருக்கும் தெரியாது
  2. விதியை மாற்றும் வலிமை யாருக்கும் கிடையாது.
  3. விதியை இறைவனின் கருணை இருந்தால் தெரிந்து கொள்ளலாம்
  4. விதியை தெரிந்து கொண்டாலும் அதனை மீறி நடக்க மனிதர்களால் முடியாது

இந்த வலிமை மிகுந்த வார்த்தைகளில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம் . இவை உண்மை மிகுந்துள்ள வாசகங்கள் .

ஆனால் அதற்காக நாம் முடங்க வேண்டிய அவசியம் என்ன?

சரி , இப்போது விதி எவ்வாறாக செயல்படுகிறதென்று பார்ப்போம்.

விதி என்பது மனிதனின் சுபநலம் அல்லது அசுப நலம் இரண்டிற்கும் பொதுக் காரணியாகும் .

நன்மையையும் தீமையையும் ஒரு விதியே தருகிறது – நன்மைக்கு ஒரு விதியும், தீமைக்கு ஒரு விதியுமாக செயல்படுவதில்லை.

அப்படியானால் நமது தீர்மானத்தில்தான் கொஞ்சம் (?) கோளாறு உள்ளது.

நாம் ஒரு செயலை செய்ய துவங்கும் வரை அமைதியாக காத்திருக்கும் விதி, நாம் செயலாற்ற ஆரம்பித்தவுடன் மளமளவென வரைபடம் தயாரிக்க துவங்குகிறது.

நமது செயல் திட்டம் சரியான இருந்து நமது உழைப்பும் சரியாக இருந்து நாமும் முழு நம்பிக்கையோடு இருந்தால் வெற்றி நமதாகின்றது.

நமது செயல் திட்டம் சரியாக இருந்து நமது உழைப்பும் , நம்பிக்கையும் முழு அளவில் இல்லாதபோது வெற்றி கிடைப்பதில்லை ,

இதனைத்தான் விதி எழுதுகிறது .

நட்டு வைத்தது முள் செடியாக இருந்தால் கங்கை நீர் ஊற்றினாலும் முள் செடிதானே முளைக்கும்.

அவநம்பிக்கையோடு , எனக்கு இதெல்லாம் நடக்காது , என் தலைஎழுத்து , கர்மா , விதி என்கிற தீர்மானமான முடிவோடு நாம் செய்யும் எந்த காரியமும் நடைபெறுவது நிச்சயமில்லைதான் . காரணம் நாம் எதனை அதிகமாக நம்பிக்கையோடு முயற்சிக்கின்றோமோ அதுதான் நடக்கும் .

வெற்றி பெறவேண்டும் என்கிற சாதாரண எண்ணமும் ,

நமக்கு தோல்விதான் என்கிற தீவிரமான, நிச்சயமான நம்பிக்கையும் நம்மிடம் வேரூன்றியும் நின்றால் ,

அதுவே நமது வெற்றியின்மைக்கு முழுக் காரணமாகும்.

இப்போது புரிகிறதா ?

ஆக விதியை எழுதுவதே நாம்தான் , ஆனால் ஒவ்வொரு மனிதரும் தனக்கான விதியை தானே எழுதி விட்டு அதனை வேறு யாரோ எங்கிருந்தோ எழுதுவதாக கற்பனையும் செய்து கொண்டால் . . . .

இருட்டில் காற்றில் அசையும் துணியின் நிழலைக் கண்டு பயப்படும் குழந்தையைப் போல . .

மனிதர்கள், இல்லாத விதியினை , – இனிமேல்தான் தன்னால் உருவாக்கப்பட போகின்ற விதியினை – இப்போதே இருப்பதாக எண்ணி பயம் கொள்ளுவதும், அந்த விதிதான் தன்னை இப்படியெல்லாம் ஆட்டி வைக்கின்றது என்றெRண்ணுவதும்  அப்படித்தான் இருக்கின்றது.

விதி என்று ஒன்று உண்டு , ஆனால் அதனை தீர்மானிப்பது மனிதர்கள்தான் , இறைவன் அல்ல , கிரகங்கள் அல்ல .

இறைவனுக்கு இதுவல்ல வேலை , கிரகங்கள், நன்மை தீமை என இரண்டு விதமான கார்யங்களுக்கும் பொதுவானவை .

நன்மையை அல்லது சரியான வழியை தேர்ந்தெடுத்தால் அதன்படியும் , தீமையை அல்லது சரியற்ற வழியை தேர்ந்தெடுத்தால் அதன்படியும் நம்மை வழி நடத்தும் அவ்வளவே . அதைத் தவிர அப்படி செய்யாதே , இப்படி செய்யாதே என்றெல்லாம் கிரகங்கள் தடுக்காது .

விருப்பம் மனிதர்களது , அதனை நிறைவேற்றுவதும் மனிதர்களே , நிறைவேறாமல் செய்து கொள்வதும் அவர்களே .

கால்பங்கு விதியினை , மனிதர்கள் தங்களது முக்கால்பங்கு மதியினால் முழு பங்கு விதியாக்கும் வேடிக்கைதான் இன்றைய நடைமுறையில் காண்கிறோம்.

மனிதர்கள் விதியை சரியாக வகுத்து அதன்படி நடக்கவேண்டும் என்பதற்காகத்தான் , நன்மையையும், தீமையையும் பகுத்தறியும் பகுத்தறிவு எனும் பேராயுதம் அவர்களுக்கு தரப்பட்டுள்ளது .

விதியை மதியால் வெல்லலாம் என்பார்கள் பெரியோர்.

விதியை மதியால் வெல்லலாம் என்பது விதியாக இருந்தால் வெல்லலாம் என்போரும் உண்டு .

இல்லாத விதியை உருவாக்கி வென்றவன் அர்ச்சுனன் , இருந்த விதியை இல்லாமல் செய்து சென்றவன் கர்ணன் .

கடுமையான தவத்தின் மூலமாக எல்லாவற்றையும் மாற்றி அமைக்கலாம் என்றாலும் அதுவும் அந்த மனிதனேதான் தவம் செய்து மாற்ற முயற்சிக்க வேண்டுமே தவிர மற்றவர்கள் தவம் செய்து மாற்றித் தர முடியாது ,

அப்படி எனும் போது . .

முழு மன நம்பிக்கையோடு , தீவிர முயற்சியோடு , வெற்றி பெறுவோம் எனும் எண்ணத்துடன் செயல்பட்டால் எல்லாவித முயற்சிகளும் ஜெயம் பெறும் என்பதே விதியாகும்.

விதியை உருவாக்குவது மனிதர்களே அன்றி வேறுயாரும் இல்லை என்பதை உணர்ந்து கொள்வோம் .

வெற்றியை நமதாக்குவோம் , வாழ்வில் அனைத்து நலனும் பெறுவோம் .

வாழுங்கள் வளமோடு , வாழும் நாளெல்லாம்.

அன்புடன் கருணாகரன் .